பாபநாசம் அருகே அருகே அம்மாபேட்டையை அடுத்த அருந்தவபுரத்தில் இயங்கி வரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் அறுவடை செய்த நெல்லோடு விவசாயிகள் ஒரு வாரமாக காத்துக் கிடக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.