districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிபிஎம் பேரவை

திருச்சிராப்பள்ளி, ஆக.11 - நாடாளுமன்ற தேர்தல் பரிசீலனை மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு முடிவுகள் விளக்க பேரவை கூட்டம் திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத் திற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இதில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.  கூட்டத்தில் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு, பகுதி குழு, கிளை செயலாளர் உட்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அர சியல் தலைமை குழு உறுப்பினரும், மேற்கு வங்க முன்னாள் முதல மைச்சருமான புத்ததேவ் பட்டாச்சாரியா உருவப் படத்திற்கு மாலை அணி வித்து செவ்வணக்கம் செலுத்தப்பட்டது.

மணல் அள்ளிய  வாகனம் பறிமுதல்

அறந்தாங்கி, ஆக.11 - புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா பூவ ளூர் வட்டம் கருங்காடு  கிராமத்தில் அனுமதி யின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட மகேந்திரா பிக்கப் நான்கு சக்கர வாகனம் மணலுடன் கைப் பற்றப்பட்டது. மணல் ஏற்றிக் கொண்டிருந்த நபர்கள் மற்றும் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டனர். மேற் படி வாகனத்தை வட்டாட் சியர் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் வரு வாய் ஆய்வாளர் பால கிருஷ்ணன், கிராம நிர்வாக அலுவலர் பொய் யாமொழி மற்றும் கிராம  உதவியாளர்கள் உதவி யுடன் நாகுடி காவல்  நிலையத்தில் ஒப்படைக் கப்பட்டது.

இலவச கண் பரிசோதனை முகாம்

பாபநாசம்,  ஆக.11 - பாபநாசம் பெனிபிட் பண்ட் லிட் தலைவர் ஆறுமுகத்தின் தாயார்  நாகரெத்தினம் அம்மா ளின் 7 ஆம் ஆண்டு நினைவாக, தஞ்சை மாவட்ட பார்வையிழப்பு தடுப்புச் சங்கம், மதுரை  அரவிந்த் கண் மருத்துவ மனை, பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தின.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த முகாமை லயன்ஸ் கிளப்  மாவட்ட ஆளுநர் செளரி ராஜன் தொடங்கி வைத் தார். இதில் லயன்ஸ் மாவட்டத்தின் முதல் பெண்மணி நிர்மலா, பாப நாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், லயன்ஸ் கிளப் தலைவர் செந்தில், செயலர் பன்னீர்செல்வம், பொரு ளாளர் மாரிமுத்து, மாவட் டத் தலைவர்கள் பங்கேற் றனர்.  இதில் மருத்துவர்கள்  700-க்கும் மேற்பட்டோ ருக்கு பரிசோதனை மேற்கொண்டு, கண் புரை  முற்றிய நிலையில் இருந்த 180-க்கும் மேற்பட் டவர்களுக்கு கண்ணில் அறுவை சிகிச்சை மேற் கொள்வதற்காக மதுரை  அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர்.

சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை தஞ்சாவூர் மாநகராட்சி அறிவிப்பு

தஞ்சாவூர், ஆக.11 - தஞ்சாவூர் மாநகராட்சியில் சொத்து வரியை அக்டோபர்  31 ஆம் தேதிக்குள் செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது என மாநகராட்சி ஆணையர் ஜி. கண்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தஞ்சாவூர் மாநகராட்சியில் இரண்டாம் அரையாண்டு சொத்து  வரியை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்துப வர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்த சலுகையைப் பயன்படுத்தி பொதுமக்கள், வியாபாரிகள்  அனைவரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன்பாகவே தங்களது சொத்து வரியைச் செலுத்தி மாநகராட்சிக்கு உதவிடு மாறும், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறுமாறும் கேட்டுக் கொள்கிறோம். சொத்து வரியை காந்திஜி சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலக கணினி வரி வசூல் மையம், கல்லுக்குளம் மற்றும்  முனிசிபல் காலனியிலுள்ள கணினி வரி வசூல் மையங்க ளில் செலுத்தலாம். http://tnurbanepay.tn.gov.in/PT_CPP aymentDetailsaspx என்ற இணைப்பைச் சொடுக்கி இணைய வழி மூலமாகவும் சொத்து வரியைச் செலுத்தலாம்.  அனைத்து  வங்கிகளின் நெட் பேங்கிங், மாஸ்டர், விசா, ரூபே அட்டைகள்,  கூகுள் பே, அமேசான் பே, பேடிஎம், போன் போ போன்ற செயலிகளின் வழியாகவும் செலுத்தலாம்” என்றார்.

முதல்வர் கோப்பை விளையாட்டு இணையதள முன்பதிவு தொடக்கம்

புதுக்கோட்டை, ஆக.8-  தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டுப் போட்டிகளுக்கான விளையட்டு வீரர் வீராங்க னைகள் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்திருப்பதாவது: இவ்வாண்டில் நடத்தப்பட இருக்கும் போட்டி களில் வெவ்வேறு புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு  பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், மாற்றுத்திறனாளி கள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட,  மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதல மைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட  உள்ளது. போட்டிகளில் பங்கேற்க 05.08.2024 முதல்  இணையதளம் மூலம் முன்பதிவு செய்யும் நிகழ்வினை  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ .1 இலட்சமும். இரண்டாம் பரிசாக ரூ  75 ஆயி ரமும்  மூன்றாம் பரிசாக ரூ  .50 ஆயிரமும் வழங்கப்படும்.  குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர் களுக்கு முதல் பரிசாக தலா ரூ 75 ஆயிரமும் இரண்டாம்  பரிசாக தலா ரூ 50 ஆயிரமும் மூன்றாம் பரிசாக தலா  ரு.25 ஆயிரமும் வழங்கப் பட உள்ளது. மேலும் இவ்வாண்டு தனிநபர் மற்றும் குழு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழ்நாடு அரசு முதன்முறையாக நான்காம் இடம் பெற்றவருக்கும் மூன்றாம் பரிசிற்கு இணையாக வழங்கிட உள்ளது. போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்திட கடைசி  நாள் 25.08.2024 ஆகும். எனவே விளையாட்டில் ஆர்வம்  உள்ள அனைவரும் தவறாமல் https://sdat.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்திட கேட்டுக்  கொள்ளப்படுகிறது.

அரசு நகர் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதி இருவர் பலி

மதுரை, ஆக.11-  மதுரை மாவட்டம் திருமங்கலம் - ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி என்ற  இடத்தில்,  டி. கல்லுப்பட்டியிலிருந்து திருமங்கலம் நோக்கி  வந்த அரசு நகர் பேருந்தும் , மதுரையிலிருந்து ராஜபாளை யம் நோக்கி சென்ற காரும் எதிர்பாராதமாக நேருக்கு நேர்  மோதிக் கொண்டன.  இந்த விபத்தில் காரில் பயணித்த சிறுமி  சிவானிகா( 8) மற்றும்  சௌந்தரராஜன்(40)  சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் .  மேலும் காரில் பயணித்த இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்துள்ளனர்.

பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம்

தஞ்சாவூர், ஆக.11 -  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யத்துக்கு உட்பட்ட 50 சத வீத தொடக்கப் பள்ளிகளில்  முதல் கட்டமாக அடுத்த  இரண்டு ஆண்டுகளுக்கான (2024-26) பள்ளி மேலாண் மை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக, மறு  கட்டமைப்பு கூட்டம் சனிக் கிழமை நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு மாவட்ட திட்ட ஒருங்கி ணைப்பு அலுவலகத்தின் வாயிலாக ஒவ்வொரு பள்ளி களுக்கும் ஒரு பார்வையா ளர் நியமிக்கப்பட்டு உறுப் பினர்கள் தெரிவு செய்யப்பட் டனர்.  இதில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எம்.கே. ராமமூர்த்தி, எஸ்.சிவசாமி, வட்டார வளமைய மேற் பார்வையாளர் அ.முருகே சன், ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன் ஆகியோர்  பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.  பேராவூரணி  பேராவூரணி வட்டா ரத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி  மேலாண்மை குழு மறுக்  கட்டமைப்பு தேர்தல் நடை பெற்றது.  இதில் முதல் கட்டமாக சனிக்கிழமை 35 தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர் கள் அனைவரும் கலந்து கொண்டு, புதிய தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்தனர். பேராவூரணி வட்டாட்சி யர் இரா.தெய்வானை, வட்டார வளர்ச்சி அலுவலர்  சாமிநாதன், காவல் ஆய்வா ளர் பசுபதி, வட்டாரக் கல்வி அலுவலர்கள் கலாராணி, அங்கயற்கண்ணி, பள்ளி தலைமை ஆசிரியர்கள், வட்டார வளமைய மேற் பார்வையாளர் கோகுல கிருஷ்ணன், ஆசிரியர் பயிற் றுநர்கள், ஆசிரியர்கள் ஆகி யோர் சிறப்பு பார்வையாளர் களாக கலந்து கொண்டனர்.  பேராவூரணி அருகே உள்ள நாடாகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி யில் தலைமை ஆசிரியர் சித்ரா தேவி தலைமையில் நடைபெற்ற பள்ளி மேலாண் மைக் குழு மறு கட்ட மைப்பு நிகழ்வில், பள்ளி மேலாண்மைக் குழு தலைவ ராக மு.மஞ்சுளா, துணைத் தலைவராக அ. சரண்யா, முன்னாள் மாணவர் சா.தங்கராமன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் ரெ. வாசுகி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.  உதவி ஆசிரியர் லெட்சுமணசாமி நன்றி கூறினார்.