தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழை-எளிய மாணவர்கள் 450-க்கும் மேற்பட்டோர் படிக்கின்றனர். இப்பள்ளி விளையாட்டு மைதானத்தின் முன்பக்க சுற்றுச்சுவர் இடிந்த நிலையில் உள்ளது. இந்த சுற்றுச்சுவரை புதிதாக தரமானதாக கட்ட வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.