districts

தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, அக்.16 - அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க  திருவெறும்பூர் ஒன்றிய மாநாடு ஞாயிறன்று திரு வெறும்பூரில் நடந்தது.  மாநாட்டிற்கு தெய்வநிதி தலைமை வகித்தார். சங்க கொடியை மூத்த தோழர் மலையாளம் ஏற்றினார். அஞ்சலி தீர்மானத்தை பெரியசாமி வாசித்தார். மகா லிங்கம் வரவேற்றார். வேலையறிக்கையை ஒன்றிய செயலாளர் முரு கேசன் வாசித்தார். மாவட்ட செயலாளர் பழநிசாமி மாநாட்டை துவக்கி வைத் தார். சிபிஎம் ஒன்றிய செய லாளர் மல்லிகா வாழ்த்துரை  வழங்கினார். ஊழல் முறைகேடு களைந்து தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல் படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத் தில் பணியிலும், பணிக்கு சென்று திரும்பும் போதும் விபத்து ஏற்பட்டு இறக்க நேரிட்டால் குடும்ப பாது காப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. ஒன்றியத் தலைவராக பெரியசாமி, செயலாளராக தெய்வநிதி, பொருளாளராக மகாலிங்கம் துணை தலை வர்களாக முருகேசன், ஜீவ பாரதி, துணை செயலா ளர்களாக ராமமூர்த்தி, ராஜேந்திரன் உள்பட 15  பேர் கொண்ட ஒன்றியக் குழு  தேர்வு செய்யப்பட்டது.