மயிலாடுதுறை, பிப்.13- மயிலாடுதுறை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி காலை வழிபாடு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டு மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார். பின்னர் சிவகங்கையில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாநில அளவில் நடைபெற்ற மாநில குத்துச் சண்டை போட்டியில் முதல் பரிசு பெற்று தங்கப் பதக்கம் வென்ற 9-ஆம் வகுப்பு மாணவி வி.ரோஷினி, 2-ஆவது பரிசாக வெள்ளி பதக்கம் பெற்ற 10-ஆம் வகுப்பு மாணவி கேத்தரினா, 2-ஆவது பரிசாக வெள்ளி பதக்கம் பெற்ற 7-ஆம் வகுப்பு மாணவி வி.ஹேம தர்ஷினி, மூன்றாவது பரிசாக வெண்கலப் பதக்கம் பெற்ற 8ம் வகுப்பு மாணவி கோபிகா ஆகியோரை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார். ரஷ்யப் பெண்ணை