புதுக்கோட்டை, ஜூன் 8-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் படி மின்சாரம் மூலம் இயங்கும் புல் நறுக்கும் கருவியை சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கிட 30 எண்ணிக்கை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெறும் விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.50 ஏக்கர் நிலத்தில் தீவன சாகுபடி செய்தல் மற்றும் மின்வசதி உடை யவராக இருத்தல் வேண்டும். கடந்த 10 வருடத்தில் இது போன்ற அரசு மானியத் திட்டத்தில் பயன்பெற்றவராக இருத்தல் கூடாது.
எனவே, திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் தகுதி யுள்ள கால்நடை வளர்க்கும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.