districts

அனுமதி பெறாத மதுக்கூடங்களை அகற்றுக! டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேண்டுகோள்

நாகப்பட்டினம், மே 18-

     நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் அருகில் அரசு அனுமதி பெறாத பார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

   இதுதொடர்பாக நாகை மாவட்ட டாஸ்மாக் ஊழி யர் சங்க தலைவர் எஸ்.சிவக்குமார், செயலாளர் ஏ. சிவனருட்செல்வன், பொருளாளர் பி.ராமலிங்கம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘விழுப் புரம் மாவட்டத்தில் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்பட்டு பலர் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஆய்வுகளை மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

  ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல அரசு அனுமதி பெறாத பார்கள்  டாஸ்மாக் கடைகளுக்கு அருகிலேயே சட்டவிரோத மாக செயல்பட்டு வருகிறது. மேலும் பார்களில் உண வுப் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்வதற்கு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  

   ஆனால், தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்து அனுமதி பெறாத பார்களிலும் அரசியல் செல்வாக்கு மற்றும் உள்ளூர் செல்வாக்கை பயன்  படுத்தி, மதுபானங்களை கடை விற்பனை நேரத்தி லும் மற்றும் அதற்கு முன்பும் பின்பும் அரசு விதி முறை களுக்கு முற்றிலும் முரணாக பார்களில் விற்பனை செய்து வருகிறார்கள்.

   எந்தவித விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இன்றி செயல்படும் இது போன்ற மதுபான பார்களால் மக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் அது ஒட்டு மொத்த அரசுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    எனவே சட்டத்திற்கு புறம்பாக அரசு அனுமதி பெறாமல், மேலும் அரசு அனுமதியிலுள்ள நிபந்த னைகளுக்கு உட்படாமல் செயல்பட்டு வரும் அனைத்து பார்களையும் உடனடியாக அகற்றி சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களை பாதுகாக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.