districts

திருச்சி முக்கிய செய்திகள்

நாளை தஞ்சாவூரில் பொது  விநியோக குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 11 -  பொதுவிநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் களைவதற்கும், மக்களின் குறைக ளைக்கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வத ற்கும், ஒவ்வொரு மாதமும் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.   அதன்படி 2024 ஜூலை மாதத்திற்கான பொது விநி யோகத் திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 13  சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.   எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில், வட்ட  வழங்கல் அலுவலரிடம் மனுக்களை அளித்து பயன்பெறு மாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் புதுக்கோட்டை ஆட்சியர் வழங்கினார்

புதுக்கோட்டை, ஜூலை 11  புதுக்கோட்டை மாவட்டம், இலுப்ப+ர் வட்டம், சித்தனவாசல் சரகம், பனம்பட்டி வருவாய் கிராமத்தில், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில், மக்கள் தொடர்பு முகாம், மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமில், வருவாய்த்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில், 432 பயனாளிகளுக்கு ரூ.1,05,79,950 மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர்.ரம்யாதேவி, இலுப்ப+ர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வ நாயகி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) பொறி.பரம சிவம், இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) ரவிச்சந்தி ரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை, ஜூலை 11-  தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ள தாவது: தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்தம் தமிழ்த்தொண்டி னைப் பெருமைப்படுத்துமுகமாக தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்தி லிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தெரிவு செய்து  அவர்களுக்கு “தமிழ்ச்செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து  வருகிறது.  “தமிழ்ச்செம்மல்” விருதாளர்களுக்கு ரூ.25,000 ரொக்கப் பரிசுத்தொகையும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பெற்று வருகின்றன.   இவ்வகையில் 2024ஆம் ஆண்டிற்கான “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் புதுக் கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிட மிருந்து வரவேற்கப்படுகின்றன.  விருதுக்குரிய விண்ணப் பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலைத்தளத்தில் “விண்ணப்பப்படிவங்கள்” என்ற தலைப்பின்கீழ் பதி விறக்கம் செய்து கொள்ளலாம்.   தமிழ்ச்செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கும் தமிழ்  ஆர்வலர்கள், விருதுக்கான விண்ணப்பத்தினை இருபடி களில் உரியவாறு நிறைவு செய்து, தன்விவரக்குறிப்பு, நூல்கள், கட்டுரைகள் ஏதேனும் வெளியிடப்பட்டிருப்பின் அவை பற்றிய விவரங்கள் (பட்டியலோடு ஒவ்வொன் றிலும் இரு படிகள் இணைக்கப்பட வேண்டும்), தமிழ்ச்  சங்கங்கள், தமிழ் அமைப்புகளில் ஏதேனும் பொறுப்பில்  அல்லது உறுப்பினராக இருப்பின் அதுபற்றிய விவரம், விருதுக்குத் தகுதியாகக் குறிப்பிடத்தக்கப் பணிகள் தமிழறிஞர்கள் இருவரின் பரிந்துரைக்கடிதம், மாவட்டத்தில் செயற்படும் தமிழ் அமைப்புகளின் பரிந்து ரைக் கடிதம், ஆதார் அட்டை ஒளிப்படி, குடும்ப அட்டை ஒளிப்படி மற்றும் இரண்டு கடவுச்சீட்டு அளவிலான நிழற்படங்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிகளுக்கானச் சான்றுகளையும் இணைத்து புதுக்கோட்டை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 05.08.2024 ஆம் நாளுக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைத்தல் வேண்டும்.   மேலும், கூடுதல் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04322-228840 என்ற தொலைபேசி,கட்செவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 

புதுக்கோட்டையில் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

புதுக்கோட்டை,ஜூலை 11- திருச்சியைச் சேர்ந்த ரவுடி புதுக்கோட்டையில் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருச்சி உறையூர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற துரைசாமி.இவர் மீது திருச்சியைச் சேர்ந்த இளவரசன் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் புதுக்கோட்டை-திருச்சி மெயின் ரோட்டில் வம்பன் காட்டுப்பகுதியில் துரைசாமி பதுங்கியி ருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையிலான காவல்துறையினர் வியாழ னன்று மாலையில் அப்பகுதிக்குச் சென்றனர். காவல்துறை யினரைக் கண்டதும் துரைசாமி அரிவாளால் அவர்களை வெட்ட முயன்றார். அப்போது காவல்துறையினரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மயிலாடுதுறையில்  “ மக்களுடன் முதல்வர் “ திட்டம் தொடக்க விழா

மயிலாடுதுறை ஜூலை-11,  மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரத் திற்குட்பட்ட செம்பனார்கோயில் அண்ணா திருமண மண்டபத்தில் ஊர கப்பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டம் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகா பாரதி தலைமையில் நடைபெற்றது.   மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஆர்.சுதா , பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் , சீர்காழி சட்ட மன்ற உறுப்பினர் எம்.பன்னீர் செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சி யர் பேசுகையில்,  தமிழ்நாடு முதல மைச்சர்  “ஊரக பகுதிகளில், மக்களு டன் முதல்வர் திட்டத்தை”, இன்றைய தினம் தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட செம்ப னார்கோயில் ஊராட்சியில்,   துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 வட்டாரங்களில், மொத்தமாக 241  கிராம ஊராட்சிகள் உள்ளன. இத்திட்டத்தில் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளையும், உள்ளடக்கி 11.07.2024 முதல் 20.08.2024 வரை 15 நாட்களில் 43 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.  இன்றைய முகாமில் செம்ப னார்கோயில், ஆறுபாதி, மாத்தூர், முக்கரும்பூர், திருச்சம்பள்ளி, காள ஹஸ்தினாபுரம் மற்றும் முடிகண்ட நல்லூர் ஆகிய 7 கிராம பஞ்சாயத்துக் களை உள்ளடக்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நடை பெற்று வருகிறது. இம்முகாம்க ளில் பெறப்படும் கோரிக்கைகளில், இ-சேவை வாயிலாக விண்ணப்பிக் கும் மனுக்களுக்கு, உடனடியாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இ-சேவை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.   இம்முகாமில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் , மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமே கலை, செம்பனார்கோயில் ஒன்றி யக்குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், மயிலாடுதுறை ஒன்றியக்குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர்மன்றத் தலை வர் என்.செல்வராஜ், செம்ப னார்கோயில் ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பாஸ்கரன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ர.துளசிரேகா ரமேஷ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தெ. வெண்ணிலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரா.முத்துலெட்சுமி, க.ராணி, க.செல்வரத்தினம், ஆறுபாதி ஊராட்சிமன்றத் தலைவர் கே.தமிழரசி, மாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ராஜலிங்கம், முக்கரும்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் பி.ஜெயக்குமார், திருச்சம்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் டி.துரை, காள ஹஸ்தினாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் எம்.ஜோதிவள்ளி, முடி கண்டநல்லூர் ஊராட்சிமன்றத் தலைவர் எஸ்.சுமதி, செம்பனார் கோயில் ஊராட்சிமன்றத் தலைவர் டி.விஸ்வநாதன் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர்.