திருவாரூர், டிச.26 - நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டு வதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் குடவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கப்ப டும் குப்பைகள், சேங்காலிபுரம் சாலை யில் உள்ள பேரூராட்சி குப்பைக் கிடங் கில் கொட்டப்பட்டு, தரம் பிரிக்கப்படு கின்றன. இந்நிலையில், வாரத்தில் ஓரிரு நாட்கள் குப்பை சேகரிக்கும் பணியாளர்கள் வரவில்லை என்றாலும், தாமதமாக வரும் நாட்களிலும் பொதுமக்கள் அருகில் உள்ள புறம்போக்கு நிலங்களில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். குறிப்பாக, குடவாசல் ஏர்ந்தவாடி தலைப்பு வாய்க்காலில் இருந்து பிரியும் பாசன வாய்க்காலில், பொதுமக்கள் குப்பை களை கொட்டி விடுகிறார்கள். மேலும், பேருந்து நிலையம் எதிர்ப்புறம் உள்ள ஏ.ஜே.கே நகரில் உள்ள பாலாஜி நகர் அருகே செல்லும் பாசன வாய்க்கால் பகுதி, அரசு மருத்துவமனை அருகே அத்திக்கடை பகுதி பாசன வாய்க்கால், மேலஅடிச்சேரி தெரு குளத்தை சுற்றியும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழு வதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டு மென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஏ. சரவணன் கூறுகையில், “நீர் நிலைகள், பாசன வாய்க்கால்களை தொடர்ந்து பரா மரிக்க வேண்டும். விவசாய காலங்களில் நீர் வயலுக்கு முறையாக செல்வதில்லை. குப்பைகளை கொட்டுவதால் நீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே உடன டியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதுகுறித்து குடவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் பரமேஸ்வரியிடம் கேட்ட போது, “மகளிர் சுய உதவிக் குழுவினர் மூலமாக 250 வீடுகளுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பணி மூன்று மாதமாக நடைபெறுகிறது. வீடு வீடாக குப்பைகளை கையாள்வது குறித்து மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் பேரூராட்சி பணியா ளர்களைக் கொண்டு ஏற்கனவே விழிப்பு ணர்வு ஏற்படுத்தி உள்ளோம். இருந்தாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றுவதில்லை. கூடுதல் விழிப்புணர்வு தேவை என்பதால், ஓரிரு நாட்களில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் பணியை செய்யவுள் ளோம். முதல் கட்டமாக அனைத்து நீர்நிலை களிலும் உள்ள குப்பைகள் அகற்றப்படும்” என தெரிவித்தார்.