districts

img

சாலையில் கொட்டப்படும் குப்பைகள் பொதுமக்கள் அவதி

தஞ்சாவூர், ஜன.2 - பேராவூரணி அருகே சாலையில் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள், மாணவிகள் அவதிப்படுகின்றனர்.  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து கொன் றைக்காடு வழியாக பட்டுக்கோட்டை செல்லும் சாலை யில், அரசுக் கல்லூரி மாணவியர் தங்கும் விடுதி உள்ளது.  இதன் அருகிலேயே முதியோர் இல்லமும் உள்ளது. இந்நிலை யில் மாணவியர் விடுதிக்கு எதிரே நீண்ட காலமாக தொ டர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.  மேலும், தண்ணீர் தேங்கி நின்று குப்பைகளில் இருந்து  துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த் தொற்று ஏற்படும்  அபாயம் உள்ளது. அருகிலேயே கல்லூரி மாணவியர் விடுதி யும், முதியோர் இல்லமும் இருப்பதால் அங்குள்ளவர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர்.  அவ்வப்போது சேரும் குப்பைகளை யாரோ சிலர் தீயிட்டு  கொளுத்தி செல்கின்றனர். இதனால் பிளாஸ்டிக் கழிவுகளும்  தீப்பற்றி எரிவதால் சாலையில் புகை சூழ்ந்து காணப்படு கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை தீ வைத்து எரிப்பதால் சுவாசக்  கோளாறுகள் ஏற்படுகின்றன.  எனவே, சாலையில் குப்பைகளை கொட்டுவதையும், தீ  வைத்து எரிப்பதையும் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள், மாணவியர் கோரிக்கை விடுத் துள்ளனர்.