புதுக்கோட்டை, டிச.24 - மனித நேயமிக்க சமூகத்தை உருவாக்குவதற்கு நூலகம்தான் மிகச் சிறந்த ஆயுதம் என கந்தர் வகோட்டை சட்டப்பேரவை உறுப் பினர் எம்.சின்னதுரை தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்டம் கீர மங்கலம் அருகே காசிம்புதுப் பேட்டையில் நாணயவியல் கழகத் தின் தலைவரும், தமிழ்நாடு முற் போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வடகாடு கிளைத் தலைவருமான எஸ்.டி.பஷிர் அலி சார்பில் பொது நூலகம் சனிக் கிழமை திறக்கப்பட்டது. புல நூற்றுக்கணக்கான புத்த கங்களைக் கொண்ட இந்த நூல கத்தை, தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தமுஎகச மாநிலத் தலைவர் நா.முத்துநிலவன் தலை மையில் நடைபெற்ற கருத்த ரங்கில், கந்தர்வக்கோட்டை சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை பேசியதாவது: நாட்டில் நாடாளுமன்றம், சட்ட மன்றம், நீதிமன்றங்கள் எல்லாம் புகழ்பாடும் மன்றங்களாக மாறி விட்டன. யாரை புகழ்பாடுகிறார் களோ அவர்களைப் பற்றிதான் இந்த சமூகம் பேசும் நிலைக்கு மாறி விட்டது. இந்த உலகத்தில் மனிதர்கள் பிறக்கும்போது சுதந்திரமாகத் தான் பிறக்கிறார்கள். ஆனால், இதில் பெரும் பகுதியினர் வாழும் போதும், இறக்கும்போதும் அடுக்கப் பட்ட மூட்டைகள் போல பல படி நிலைகளில் அடிமைப்பட்டவர் களாகி விடுகிறார்கள். இஸ்ரேல், பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் நிறுத்தம் வேண்டும் என்று உலகத்தில் பெரும்பாலான தலைவர்கள் குரல் கொடுத்த போது, இந்தியாவின் பிர தமர் மோடி மட்டும் அதற்கு எதி ரான நிலையை எடுக்கிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு முதல் மோடிக்கு முந்தைய பிரதமர் வரை பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டையே இந்திய நாடு எடுத்துள்ளது. இதுபோன்ற பாசிச நிலைப்பாட்டை எதிர்க்கும் கருத்தா யுதமாக நூலகங்களே இருக்கும் என நம்புகிறேன். மகாத்மா காந்தியில் இருந்து, கடந்த முறை இருந்த பிரதமர் (மன்மோகன் சிங்) வரை இந்தியா மதச்சார்பற்ற நாடாகத்தான் இருந் தது. எந்த நாட்டில் கலவரம் நடந்தா லும் அங்கு அமைதியை விரும்பு கிற நாடாகத்தான் இந்தியா இருந்து வந்துள்ளது. இந்தியாவின் பிரத மர் இஸ்ரேலின் பக்கம் நிற்பதை கண்டிக்கிறோம். ஏனெனில், உயர்ந்த அதிகாரிகளாக வருவ தற்கு படித்துவிடலாம். மதம் அரசியலில் கலக்காமல் மனித சமூகத்தை பாதுகாக்க வேண் டும். ஆனால், தற்போது அரசியல் காட்டுமிராண்டித் தனமாக மாறிக் கொண்டிருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மன்னர்கள் ஆட்சி நடத்தினார்கள். மன்னர்கள் மாறிவிட்டார்கள், ஆட்சிகள் மாறியுள்ளன. ஆனால், காட்சிகள் மாறவில்லை. வரலாற்றை நினைவுபடுத்தும் இடமாக நூலகம் இருந்து வரு கிறது. நான் சட்டப்பேரவை உறுப்பி னராக பொறுப்பேற்று, தொகுதி நிதியில் இருந்து முதன் முதலாக கறம்பக்குடியில் நூலகம் கட்டு வதற்குத்தான் ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கினேன். இதேபோன்று கந்தர்வகோட்டை, கீரனூரிலும் நூலகம் அமைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த ஆயுதம் நூலகம் மட்டும்தான்” என்றார். தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், பொரு ளாளர் கி.ஜெயபாலன் மற்றும் சு. மதியழகன், மு.கீதா, கே.முகமதலி ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.