districts

img

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்குகிறது

தூத்துக்குடி, நவ. 1- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா (நவ.2)சனிக்கிழமை  தொடங்குகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா சனிக்கிழமை தொடங்குகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூழைகள் நடக்கிறது. இரண்டாம் நாள் முதல் 5-ம் நாள் வரையிலும் தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ஆம் நாளான நவ.7 வியாழனன்று நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, வள்ளி-தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் மகா தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. 7-ஆம் திருநாளான 8-ஆம் தேதி வெள்ளியன்று இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெறும். விழா நாட்களில் கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொள்ளும் வகையில் 18 இடங்களில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 4 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடற்கரை பகுதியில் ஆங்காங்கே காவல்துறையினர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்துள்ளனர். கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்ட்டு உள்ளன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு செல்லாத வகையில் தடுப்பு மிதவைகள் மிதக்கவிடப்பட்டு உள்ளன. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.