அரியலூர், ஜன.11 - கேலோ இந்திய இளைஞர் விளை யாட்டுப் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, அரியலூரில் அதற்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த மாரத்தான் ஓட்டம் ஆண்கள் பிரிவில் ஜெயங்கொண்டம் மாடர்ன் கலைக் கல்லூரி மாணவர் பி.வல்லரசு முதலிடத்தையும், எஸ்.சந் தோஷ்குமார் இரண்டாம் இடத்தை யும், அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர் சிவானந்தம் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் பிரிவில் அரியலூர் அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ரித்திகாஸ்ரீ முதலிடத்தையும், வி. மோனிகாஸ்ரீ இரண்டாம் இடத்தையும், எஸ்.லெஷ்மி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் ஜன.14 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா முனனிலை வகித்தார். வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட விளையாட்டு-இளைஞர் நலன் அலு வலர் ந.லெனின், வட்டாட்சியர் ஆனந்த வேல் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.