நத்தம், நவ.2- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது சமுத்திராபட்டி கிராமம். இங்கு 1500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு திருமணி முத்தாறு ஆற்றுப்பாலம் அருகே பொது மயானம் ஒன்று உள்ளது. இங்கு மழை காலங்களில் இறந்த வர்களை கொண்டு செல்வதில் சிரமம் இருந்து வருகிறது. இந்நிலையில் வெள்ளி யன்று அப்பகுதியை சேர்ந்த பெரியாம் பிள்ளை என்பவரை அடக்கம் செய்வ தற்காக உறவினர்கள் சடலத்தை கொண்டு சென்றனர். அப்போது திருமணி முத்தாறில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வேறு வழியில்லாமல் இடுப்ப ளவு தண்ணீரில் சிரமத்துடன் சடலத்தை உறவினர்கள் தூக்கி சென்று மயானத்தில் அடக்கம் செய்தனர். எனவே பொது மக்க ளின் நலன் கருதி சம்பந்தபட்ட நிர்வாகம் ஆற்றை கடந்து செல்ல பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.