கேரள மாநில வயநாடு இயற்கை பேரிடருக்காக அரசு ஊழியர்கள் சங்கத்தினர் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் பொது மக்களிடம் நிதி திரட்டினர். வட்டக் கிளைத் தலைவர் பரமேஸ்வரி, செயலாளர் தம்பிதுரை தலைமையில், மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், மாவட்டப் பொருளாளர் வி.தெட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் ரூ.8689/- நிதி சேகரித்து மாவட்ட மையத்திடம் வழங்கினர்.