கரூர், ஆக.20 -
2023 அக்டோபர் 11 அன்று சிஐடியு சங்க மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், கரூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு நிர்மல் பள்ளி நிதியினை பெற்றுக்கொள்ள உள்ளார். இச்செய்தியை அறிந்த டிஆர்இயு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பவுல் மோசஸ், சென்னை அயனாவரத்தில் சிஐடியு சங்கம் நடத்தும் நிர்மல் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தத்திடம் வழங்கினார். இவர் கடந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.