திருச்சிராப்பள்ளி, ஆக.9-
திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ் சாலையில் அரியமங்கலம் பழைய பால்பண்ணை முதல் துவாக்குடி வரை அணுகு சாலை அமைக்க லாமா அல்லது உயர்மட்ட மேம் பாலம் அமைக்கலாமா என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் திங்களன்று நடந்த கூட்டத் திற்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை வகித்தனர்.
அணுகு சாலை குறித்த கோரிக்கை, அணுகு சாலை இல்லா ததால் ஏற்படும் பிற பிரச்சனைகள் குறித்து, கூட்டமைப்பு மற்றும் நலச் சங்க நிர்வாகிகள் தங்களது கருத்து களை தெரிவிக்குமாறு அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார். இதற்கு, பெரும்பாலும் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். ஒரு சிலர் மட்டுமே உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.
அமைச்சர் கே.என்.நேரு பதில ளித்து பேசுகையில், “அனைத்து நலச்சங்க நிர்வாகிகளும் அணுகு சாலை அமைக்க வேண்டும் என்று கூறுவதை நான் ஏற்று கொள்கி றேன். இத்திட்டம் தொடர்பாக தமி ழக முதல்வரிடம் எடுத்து கூறி, அணுகு சாலை திட்டத்தை நிறை வேற்ற ஒப்புதல் பெற்று, அணுகு சாலை அமைக்க நிச்சயம் நடவ டிக்கை எடுக்கிறேன்” என்றார்.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இத்திட்டத்தை செயல்படுத்த உறுதியுடன் இருக்கி றேன் என்றார் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருச்சி மாநகர மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணை யர் வைத்தியநாதன் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள், திட்டம் தொடர்பான உயர் அதி காரிகள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து திருச்சி பால் பண்ணை துவாக்குடி அணுகு சாலை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் பா.லெனின் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
அணுகு சாலை திட்டத்தை செயல்படுத்துவோம் என்ற அமைச் சரின் உறுதியை வரவேற்கிறேன். ஆனால் அமைச்சர், நிலம் கைய கப்படுத்த நான்கு மாதங்கள் கால தாமதம் ஆகலாம் என்றும் கூறி யுள்ளார். காலதாமதம் இன்றி, இன்னும் இரண்டு மாதத்திற்குள் நிலம் கையகப்படுத்தும் பணியை கட்டாயம் முடித்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக வைக்கப்பட்டுள்ளது.
இதற்கான கோரிக்கை மனு ஒன்றும் அமைச்சர்கள் முன்னிலை யில், மாவட்ட ஆட்சியரிடம் கொடுக் கப்பட்டுள்ளது. 42 நலச்சங்கங்கள் அணுகு சாலை திட்டத்தை முதன் மையான கோரிக்கையாக வைத் திட வேண்டும் என்று கொடுத்த கடி தங்களின் நகலும் மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தொடர்ந்து கண்கா ணித்து நிலம் கையகப்படுத்தும் வேலையை விரைந்து முடித்திட வேண்டும். ஒவ்வொரு நகரிலி ருந்தும் அதிக எண்ணிக்கையில் நலச்சங்க நிர்வாகிகள், உறுப்பி னர்கள், தன்னார்வலர்கள் வந்து அணுகு சாலை அமைக்க வேண்டு மென கோரிக்கை வைத்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.