கொள்ளிடம், மே 8 - கொள்ளிடம் அருகே கோதண்ட புரம் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை கண்டித்தும் குடிநீர் தட்டுப் பாட்டை போக்க வலியுறுத்தியும் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளி டம் அருகே கோதண்டபுரம் கிராமத்தில் புளியந்துறை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டை கண்டித்தும், விவசாய பாச னத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்க வலியுறுத்தியும், கிராமப் பகுதிகளில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்காததை கண்டித்தும் மகேந்திர பள்ளி செல்லும் நெடுஞ்சா லையில் கோதண்டபுரத்தில் செவ்வா யன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்துறை ஊராட்சி மன்றத் தலைவர் ஏ.நேதாஜி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.கேசவன், மாவட்டக் குழு உறுப்பினர் எல்.சுந்தர லிங்கம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.வி.ஆர். ஜீவானந்தம், கே.சரோஜா உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளி டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், உமாசங்கர், கொள்ளிடம் மற்றும் புதுப்பட்டினம் காவல் ஆய்வா ளர்கள் முத்துலட்சுமி, ஹேமலதா, மின்வாரிய சீர்காழி உதவி செயற்பொறி யாளர் ராஜா, அரசூர் உதவி செயற்பொ றியாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில், ஒரு நாளைக்கு இரவு நேரத்தில் 5 மணி நேரமும் பகல் நேரத்தில் ஏழு மணி நேரமும் தொடர்ந்து மின்சாரம் வழங்கப் படும். குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கப் படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் கைவிடப் பட்டது.