புதுக்கோட்டை, டிச.7- சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய பொவுடமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் படத்திற்பு நிகழ்ச்சி மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல் வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அரிமழம் கட்சி அலுவலகத்தில் தோழர் என்.சங்கரய்யாவின் உரு வப்படத்தை கட்சியின் முதுபெரும் தோழர் ஆர்.வெள்ளைச்சாமி திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ். சங்கர், ஜி.நாகராஜன், எஸ்.ஜனார்த்தனன், ஒன்றியச் செயலா ளர் ஆர்.வி.ராமையா உள்ளிட் டோர் பங்கேற்றனர். விராலிமலையில் தோழர் என்.சங்கரய்யாவின் படத்தை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர் திறந்து வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சண்முகம், ஒன்றியச் செயலாளர் என்.மகாலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறையில் மாவட்டச செயலாளர் பி.சீனிவாசன் தலை மையில் வியாழனன்று படத் திறப்பு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பேரவை நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ் உருவப் படத்தை திறந்து வைத்து சிறப்புரை யாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின்,எஸ்.துரைராஜ், ப.மாரியப்பன்,டி.சிம்சன்,ஏ.ரவிச்சந்திரன்,சி.விஜய காந்த், ஜி.வெண்ணிலா,கே.பி.மார்க்ஸ், மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் டி.ஜி.ரவி, நகர செயலாளர் டி.துரைக் கண்ணு மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.