அறந்தாங்கி, டிச.30- அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அறந்தாங்கி வர்த்தக சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது, இந்த முகாமிற்கு பள்ளி தாளாளர் கண்னையன் தலைமை வகித்தார். நிகழ்வில் வர்த்தக சங்க தலை வர் ரெ. தங்கதுரை மருத்துவ முகாமை துவக்கி வைத்தார், பள்ளி முதல்வரும், அறந்தாங்கி வர்த்தக சங்கச் செயலாள ருமான சுரேஷ் குமார் அனைவரையும் வரவேற்று பேசினார். வர்த்தக சங்க துணைத் தலைவர் செந்தில் குமார், வர்த்தக சங்க உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செல்வம், மற்றும் பல வர்த்தக சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட னர். இந்த முகாமில் ஆண்கள் மற்றும் பெண்கள் சுமார் 370 பேர் வெளி நோயாளிகளாக பயன்பெற்றனர். மேலும், கண் அறுவை சிகிச்சைக்கு 72 உள் நோயாளிகள் தேர்ந்தெ டுக்கப்பட்டு, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இவர்களுக்கு போக்குவரத்து, மருந்து, மாத்திரை, தங்குமிடம், உணவு அனைத்தும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மகேஸ்வரி நன்றி கூறினார்.