districts

img

வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்

திருச்சிராப்பள்ளி, செப்.25- திருச்சிராப் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று ஆட்சியர் பிர தீப்குமார் தலைமையில் மக்  கள் குறைதீர் கூட்டம் நடந் தது. ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மேற்குப் பகுதிச் செயலாளர் ரபீக்அஹமது, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், வெற்றிச் செல்வன் ஆகியோர் கோரி க்கை மனு அளித்தார். மனுவில் கூறப்பட்டி ருந்ததாவது:- திருச்சிராப் பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ளூர் பேருந்து நிறுத்த நிழற்குடை யில் பல இருக்கைகளைக் காணவில்லை. மீதமுள்ள  இருக்கைகள் உடைந்துள் ளது. இவற்றைச் சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாநகர், தென்னூர், சிவபிரகாசம் சாலைகள் மிக வும் மோசமாக உள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்  போடப்பட்ட தார்சாலைகள் தரமின்றி காணப்படுகிறது. அண்ணாநகர் முதல்தெரு வில் பாதாளசாக்கடை மற்  றும் குடிநீர்க் குழாய் பதிப்புப்  பணிகள் ஆறு மாதங்களுக் கும் மேலாக மந்தமாக நடக்  கிறது. பாதாளச் சாக்கடைப் பணியின் போது வெட்டப் பட்ட மரங்கள் ஆறு மாதங்க ளுக்கு மேலாகியும் அகற்  றப்படவில்லை. பாதாளச்  சாக்கடையின் மேல்மூடி சாலை மட்டத்திற்கு மேலுள் ளது. இதனால் வாகனங்கள் சேதமடைவதுடன், விபத்து கள் நேரிடும். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித் தும் நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே சம்மந்தப் பட்டவர்கள் மீது துறை ரீதி யான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகரில் வாடகை வீட்டில் பல ஆண்டுகாலம் குடியிருந்து வரும் சொந்த வீடில்லாதவர்களுக்கு இல வச வீட்டுமனை வழங்க  வேண்டும் என கூறப்பட்டிருந்  தது.