districts

img

மாநிலத்தில் முதல் முறையாக தஞ்சாவூர் அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச வகுப்புகள்

தஞ்சாவூர், ஆக.4-  தமிழ்நாடு அரசு மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் திறன் வளர்ப்புக்கு ‘நான் முதல்வன் திட்டம்’ மூலம் பல முன்னெ டுப்புக்களை எடுத்து வருகிறது. ஒன்றிய, மாநில அரசுகளில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான அரசுப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் ஆர்வம், முயற்சி, பயிற்சி மற்றும் வாய்ப்புக்களை அதிகரிக் கும் பொருட்டு தமிழகம் முழுவதும் 100 அறிவு சார் மையங்களை போட்டித் தேர்வுகளுக்கு என்றே தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. அவற்றில் சிறந்த பல முன்னோடி முயற்சி களை மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர்,  மாவட்ட வருவாய் அலுவலர் வழிகாட்ட லில், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, மையத்தின் மதியுரைஞர் பேரா சிரியர் முனைவர் சுகுமாரன் மேற்கொண்டு வருகின்றனர்.  மன்னர் சரபோஜி கல்லூரி வளாகத் தில் அமைந்துள்ள இந்த அறிவுசார் மையத்தில்  நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட தேர்வர் கள் தொடர்ந்து பயின்று வருகின்றனர். தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப் தேர்வு களுக்கு இங்கு இலவச நேரடி வகுப்பு கள் மற்றும் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படு கின்றன. வேறு எங்குமே இல்லாத வகையில் இங்கு உணவறை, தூய்மையான குடிநீர், இணைய வசதியுடன் 25 கணினிகள், நேரடி ஒளிபரப்புக்குரிய மின்னணு தொழிநுட்ப வசதி கொண்ட பயிற்சி  அறை, 5,000-க்கும் மேற் பட்ட புதிய புத்தகங்கள், அன்றாட செய்தித் தாள் கள், நிர்வாக அறை, சேமிப்பு அறை என  அனைத்து வசதிகளை யும் கொண்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதற்கான நிர்வாக அமைப்பு உருவக்கப்பட்டுள்ளது. குடிமைப் பணி தேர்வில் வென்றுள்ளவர்கள் வகுப்புகளை நடத்துகின்றனர். தேர்வர்களுக்கு அனைத்து கற்கும் பொருட்களும், வசதி யும் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.  இதன் மதியுரைஞராக பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகு மாரன், மைய பொறுப்பாளராக பாபு, மகேஷ் வரராவ், நூலக பொறுப்பாளராக மித்யா ஆகியோர் செயல்படுகின்றனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த மையம்  செயல்படும். வெள்ளிக்கிழமை மட்டும் விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.  சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள அனைத்திந்திய பயிற்சி மையத்தில் இருந்து, காணொலி மூலம் முனைவர் அன்பு ஆறுமுகம் வகுப்புகளை எடுத்தார். தஞ்சாவூர் மையத்தில் பேராசி ரியர் சுகுமாரன் துவக்கி வைத்தார். திட்ட  இயக்குனர் முனைவர் சுலோச்சனா பாஸ்க ரன் நிகழ்ச்சிக்கான அனைத்து உதவிகளை யும் வழங்கினார்.  அறிவுசார் மையத்தில் இணைய வழியில்  கலந்துரையாடலுடன் பயிற்சி அளிக்கப்படு வது தமிழகத்திலேயே இதுதான் முதல் முறை.