districts

img

தலசீமியா நோயைக் குணப்படுத்த இலவச எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை

தஞ்சாவூர், ஆக.7-  தலசீமியா நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகளுக்கு தமிழக  முதல்வரின் விரிவான மருத்து வக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இலவசமாக எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப் படுகிறது என தஞ்சாவூர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்தார்.  தஞ்சாவூர் அரசு ராசா மிராசு தார் மருத்துவமனையிலுள்ள மாவட்டத் தொடக்க நிலை இடையீட்டு சேவை மையத் தில் புதன்கிழமை நடைபெற்ற குழந்தைகளுக் கான தலசீமியா முகாமில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ரத்தத்தில் தேவையான ஹீமோகுளோ பின் என்ற புரதத்தை உருவாக்க முடியாத தால் மரபு வழி நோயான தலசீமியா ஏற்படு கிறது. இந்த நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து பிறந்த 6 மாத குழந்தைகளில் இருந்து நோயின் அறிகுறிகள் வெளிப்பட  தொடங்கலாம். இதனால், அக்குழந்தை களுக்கு வளர்ச்சியின்மை, விளையாட்டில் ஆர்வமின்மை, முகம், கால் வீக்கம் போன்ற பாதிப்புகள் இருக்கும். தலசீமியா நோய் கண்டறியப்பட்ட குழந் தைகளுக்கு மாதந்தோறும் ரத்த மாற்றம் தேவைப்படுகிறது. மேலும், நாள்தோறும் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவையெல்லாம் தற்காலி கமானதே தவிர, நிரந்தர தீர்வாக இருக்காது. இக்குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே நிரந்தர தீர்வாக அமைகிறது. இந்தச் சிகிச்சை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்  திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாகச் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 6 குழந்தைகளுக்கு தலசீமியா நோய் கண்ட றியப்பட்டு, தொடர் சிகிச்சையில் உள்ள னர். இந்நிலையில் தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையும், சென்னை குளோபல் மருத்துவமனையும் இணைந்து தலசீமியா முகாமை ஜூலை 20 ஆம் தேதி நடத்தின. இதன் மூலம் 2 குழந்தைகளுக்கு தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எலும்பு மஜ்ஜை  மாற்று அறுவை சிகிச்சை சென்னை குளோ பல் மருத்துவமனையில் இலவசமாக செய்யப் பட்டது.  தற்போது இருவரும் நலமுடன் உள்ள னர். இதே சிகிச்சையை தனியார் மருத்துவ மனையில் செய்ய ஏறத்தாழ ரூ.25 லட்சம் செலவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.