புதுக்கோட்டை, அக்.16- புதுக்கோட்டை மாவட்டம் திருவரங் குளம், அறந்தாங்கி, அன்னவாசல் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில், பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய் யநாதன் திங்கள்கிழமை வழங்கினார். நிகழ்ச்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், கோட்டாட்சி யர்கள் ச.சிவக்குமார் (அறந்தாங்கி), அ.அக்பர்அலி (இலுப்பூர்), முதன் மைக் கல்வி அலுவலர் கூ.சண்முகம், முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.