மயிலாடுதுறை ஆக-22, மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. செம்பனார்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் விஸ்வநாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அருள்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் வீ. ரமா வரவேற்றார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் 170 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி பேசினார். விழாவில் மாவட்ட கூட்டுறவு துறை தலைவர் ஞானவேலன், ஒன்றியக்குழு துணை தலைவர் பாஸ்கரன், திமுக தஞ்சை தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பிஎம்.ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், அமுர்த விஜயகுமார், அப்துல் மாலிக், பெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் தமிழ்வேந்தன் நன்றி கூறினார். இதேபோல் சங்கரன்பந்தல் அரசினர் மேல்நிலைப் பள்ளியிலும் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம். முருகன் 61 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கினார்.