புதுக்கோட்டை, அக்.21- புதுக்கோட்டை மாவட்டம்ரூபவ் கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை ஆகியோர் திங்கள்கிழமை வழங்கினர். கறம்பக்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 100 மாணவர்களுக்கும், கறம்பக்குடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200 மாணவிகளுக்கும் என ஆகமொத்தம் 300 மாணாக்கர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் (பொ) க.ஜெயந்தி, ஒன்றியக்குழுத் தலைவர்கள் மாலா ராஜேந்திரதுரை (கறம்பக்குடி), மகேஸ்வரி சண்முகநாதன் (அறந்தாங்கி), பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் மு.இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.