districts

img

அரியலூரில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

அரியலூர், ஆக.1-

     அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில், திங்களன்று நடை பெற்ற மக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கூட்டத்திற்கு ஆட்சியர் ஜா.ஆனி மேரி  ஸ்வர்ணா தலைமை வகித்து, பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்ட 336 கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுக்கு உத்தரவிட்டார்.  

    முன்னதாக அவர், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல  அலுவலகம் சார்பில் உலமாக்கள் மற்றும்  பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 6 பயனாளிகளுக்கு ரூ.30,867 மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலு வலர் ம.ச.கலைவாணி, மாவட்ட ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங் கோதை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல  அலுவலர் உமாமகேஸ்வரன் உள் ளிட்டோர் கலந்துகொண்டனர்.