வாரிய குடியிருப்புகளை வாடகைக்கு விட்டு மோசடி: ஊழியர் கைது
தஞ்சாவூர், டிச.19- தஞ்சாவூர் அருகே நகர்ப்புற வாழ்விட வாரிய குடி யிருப்புகளில் வாடகைக்கு விட்டு மோசடி செய்த ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் அருகே, பிள்ளையார்பட்டியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடி யிருப்புகள் உள்ளன. இதில், கியூ மற்றும் டி வளா கத்தில் காலியாகவுள்ள வீடுகளில் சிலருக்கு மோசடியாக வாடகைக்கு விடப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன. அதன் பேரில் வாரியத்தின் இளநிலைப் பொறியாளர் மொகைதீன் அப்துல் காதர் விசாரணை மேற்கொண்டார். இதில், இந்தக் குடியிருப்புகளில் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றும் சிந்தாமணி குடியிருப்பைச் சேர்ந்த ஜி. திருவள்ளுவன் (57) என்பவர் மோசடியாக தலா ரூ. 1,000 வாடகை வசூலித்து 10 பேருக்கு வாடகைக்கு விட்டு வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து, தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலை யத்தில் மொகைதீன் அப்துல் காதர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து திருவள்ளு வனை கைது செய்தனர்.
ஆதிதிராவிடர் - பழங்குடியினருக்கு நிலம் வாங்க மானியத்தில் கடன்
தஞ்சாவூர், டிச.19- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) வாயிலாக, நன்னிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், விவசாய தொழி லாளர்களை ஊக்குவித்திடும் வகையில் விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்தொகை யினை இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டி யில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது. நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் பொருட்டு அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பீட்டின்படி திட்டத் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங் கப்படும் நிலங்களுக்கு 100 விழுக்காடு முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்களிக்கப்படும். மேலும், ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மகளிர் இல்லாத குடும்பங்களில் கணவர் அல்லது மகன்க ளுக்கு வழங்கப்படும். 18 முதல் 55 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டவராக இருக்க வேண்டும். விவசா யக்கூலி வேலை செய்பவராகவும் இருக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் நிலம் வாங்கும் போது, உத்தேசித் துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். தாட்கோ இணையதள (www.tahd co.com) முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலு வலகத்தை அணுகி விவரம் பெற்று, உரிய ஆவ ணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த 2 பேர் கைது
அரியலூர், டிச.19- அரியலூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் தாலி சங்கிலியை பறித்து சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் வடக்கு தெருவைச் சேர்ந்த பிரேம்ஜோசப் என்பவரது மனைவி குழந்தை தெரஸ் (37). இவர் கடந்த 9-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பின்னால் வந்த மர்ம நபர்கள், 10 சவரன் தாலிச் சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த னர். இந்நிலையில் வாகன தணிக்கையில் லால்பேட்டை பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது பைத் (24), அதே பகுதியை சேர்ந்த முகமதுஷாஜகான் (22) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
டிச.24 பட்டுக்கோட்டையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர், டிச.19 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கோட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் டிசம்பர் 24 காலை 10 மணிக்கு பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தொடர்புடைய வட்டாரங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.
கலைஞர் கைவினைத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு மயிலாடுதுறை ஆட்சியர் தகவல்
மயிலாடுதுறை, டிச.19- மயிலாடுதுறை மாவட்டத்தில், மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலம் புதிய தொழில் முனைவோர்களை உரு வாக்கும் நோக்கில்; “கலைஞர் கைவினைத் திட்டத்திற்கு” விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் தையற்கலைஞர், மண் பாண்டம் வனைவோர், சிற்ப கைவினைஞர், தச்சு வேலை செய்வோர், பூ தொடுப்போர், பூ அலங்காரம் செய்வோர், சிகை அலங்காரம் செய்வோர், அழகு கலை நிபுணர், பாய் பின்னுவோர், கூடை முடைவோர், மூங்கி லாலன பொருட்கள் செய்வோர், நெசவு செய்வோர், துணி வெளுப்போர், சாயமிடு வோர், கட்டடம் கட்டும் வேலை செய்வோர், தோல் பொருட்கள் செய்வோர், உலோக பொ ருட்கள் செய்வோர், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்வோர் உள்ளீட்ட அரசால் நிர்ணயிக்கப்பட்ட 25 கைவினைத் தொழில்களில் ஈடுபட்டவர்கள் விண்ணப் பித்து பயன் பெறலாம். விண்ணப்பிக்க தேவையான ஆவ ணங்கள் ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்கள், நல வாரிய அட்டை, பான்கார்டு, விலைப்புள்ளி: சாதிசான்றிதழ், தகுந்த முன் அனுபவச்சான்று( 5 வருடம்) மற்றும் புகைப்படம் ஆகும். இத்திட்டத்தில் பதிவு செய்ய msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண் ணப்பித்து இரண்டு விண்ணப்ப நகல்களு டன் உரிய ஆவணங்களை இணைத்து மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியரக வளாகம், மயிலாடுதுறை (நான்காம் தளம்); அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்கள் பெற 04364-212295 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
டிச.22 ஜெயங்கொண்டத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்
அரியலூர், டிச.19- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 22 அன்று காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடைமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கண் புரை கண்ட நோயாளிகள் முகாம் தினத்தன்று புதுச்சேரியை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கண்களில் உள்விழி (IOL)லென்ஸ் இலவசமாக பொருத்தப்படும், மேலும் மருந்து, மாத்திரை, போக்கு வரத்து செலவு, தங்கும் வசதி அனைத்தும் இலவச மாக வழங்கப்படுகிறது. அரிய வாய்ப்பை கண் சம்பந்தப்பட்ட நோயாளிகள் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
டிச.27 விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கரூர்,டிச.19- கரூர் மாவட்டத்தில் டிசம்பர் - 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட் டத்தை சார்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான விசாரணை ஒத்திவைப்பு
புதுக்கோட்டை, டிச. 18:- முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பே ரவை உறுப்பினராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றத் தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. விஜய பாஸ்கரும் அவரது வழக்குரைஞர்களும் ஆஜராகினர். அவரது மனைவி ஆஜராகவில்லை. இந்த வழக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறாமல் சபாநாயகரின் ஒப்புதலைப் பெற்று தொடரப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றம் கணக்கில் கொள்ள வேண்டும் என விஜயபாஸ்கர் தரப்பு வழக்குரைஞர்கள் குறிப்பிட்டனர். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ஆர்.கிரிஜா ராணி உத்தரவிட்டார்.