திருச்சிராப்பள்ளி, ஜன.24 - திருச்சி மாநகராட்சியின் நான்கு கோட்டப் பகுதிகளிலும் தற்போது 18 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல் பட்டு வருகின்றன. மேற்கூறிய 18 சுகாதார நிலையங்களுக்கும் தலா இரு துணை நல மையங்கள் மற்றும் இரு சுகாதார ஆய்வ கங்கள் தேசிய நகர்புற சுகாதார திட்டம் 2021-22ன் கீழ், 15-வது நிதிக் குழு மானிய நிதியின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் துணை நல மையங்கள் மற்றும் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வகங்கள் என மொத்தம் ரூ.9.44 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த உள்ளது. இம்மையங்களில் யோகா மையம், நோயாளிகள் காத்தி ருப்பு அறை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி மற்றும் கூடுதல் 3 அறைகள் ஆகியவை 843.62 ச.அடியில் அமைக்கப்படு கிறது. அதன்படி, மேற்கூறிய அனைத்து பணிகளுக்கும் அடிக்கல் நாட்டும் விதமாக கருமண்டபம் பகுதி, தெற்கு தெரு வில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பூமி பூஜை செய்து பணிகளை திங்கட்கிழமை துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், நகரப் பொறியாளர் அமுதவல்லி, செயற்பொறியாளர் சிவபா தம், உதவி ஆணையர் செல்வ பாலாஜி, முன்னாள் துணை மேயர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.