districts

img

அரசு விதை சேமிப்பு கிடங்கு கட்ட அடிக்கல் நாட்டு விழா

மயிலாடுதுறை,  ஆக.28 - மயிலாடுதுறை மாவட் டம், செம்பனாகோவில் ஊராட்சி ஒன்றியம், திருக்க டையூர் ஊராட்சியில் மாநில அரசு விதைப் பண்ணை உள்ளது. இந்தப் பண்ணையில், வேளாண்மை மற்றும் உழவர்  நலத்துறை சார்பில் ரூ.1 கோடியே 95 லட்சம் மதிப்பீட் டில் விதை சேமிப்பு கிடங்குடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலை யம் கட்டப்பட உள்ளது. இதற்கான பணி களை, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம். முருகன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  வேளாண்மை துறை இணை இயக்கு நர் சேகர், செம்பனார்கோவில் ஒன்றிய குழு  தலைவர் நந்தினி ஸ்ரீதர், வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை துணை இயக்குநர் வெற்றி வேலன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசரஸ்வதி, திருக்கடையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாஸ்கரன், ஊராட்சி மன்ற உறுப்பி னர் இரா.செந்தில் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.