districts

img

சிபிஎம் மாநிலக் குழு அலுவலக முன்னாள் செயலாளர் தோழர் ரமணி காலமானார்

கும்பகோணம், ஏப். 2-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  தமிழ்நாடு மாநிலக் குழு  அலுவலக முன்னாள் செயலாளர் தோழர் ரமணி (வயது 80) உடல் நலக்குறைவால் கால மானார். இவர் சேலம் ஸ்டீல் நிறுவனத்தில்  பணியாற்றிய போது தொழிலா ளர்களை ஒன்றிணைத்து சங்கம்  அமைத்து தொழிலாளர் உரிமைகளுக் காக போராடியவராவார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு அழைத்ததின் பெயரில் தனது வேலையை விட்டுவிட்டு,  மாநிலக் குழு அலுவலக செயலாளராக திறம்பட பணியாற்றினார்.  தோழர் ரமணி தனது இறுதி நாளில்  தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் வசித்து  வந்தார். கட்சியின்  திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய உறுப்பினராக தன்னு டைய இறுதி காலம் வரை கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தோழர் ரமணி  உடல்நலக் குறைவால் செவ்வாய் அன்று மதியம் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தி னார். அவருக்கு மனைவி சாவித்திரி, மகள்கள் மூவர் உள்ளனர். தகவல் அறிந்து சிபிஎம் தஞ்சை  மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டி யன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன், சி. ஜெயபால், மாவட்ட குழு உறுப்பினர் சா.ஜீவபாரதி, பக்கிரி சாமி,  திருவிடைமருதூர் வடக்கு ஒன்றி யச் செயலாளர் நாகேந்திரன், கும்பகோ ணம் மாநகரச் செயலாளர் செந்தில் குமார், சேலம் சிஐடியு தலைவர்கள் எஸ்.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர், சிஐடியு தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் கண்ணன், துணைத் தலைவர் சேகர், தமுஎகச சொக்கலிங்கம், மாதர் சங்க  பொறுப்பாளர் அறிவு ராணி, வாலிபர்  சங்க மாவட்ட பொருளாளர் வழக்கறி ஞர் ராமன், மாணவர் சங்கம் பிரதீப் உள்ளிட்டோர் மறைந்த தோழர் ரமணி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரி வித்தனர். மறைந்த தோழர் ரமணிக்கு சிபிஎம்  தஞ்சை மாவட்டக் குழு செவ்வணக் கத்தை தெரிவித்துள்ளது.