districts

img

தோழர் வி.அண்ணாமலை காலமானார்

புதுக்கோட்டை, டிச.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  புதுக்கோட்டை மாவட்ட முன்னாள்  செயற்குழு உறுப்பினர் தோழர் வி. அண்ணாமலை (74) உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அன்னாரது இறுதி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாள ராகவும், தற்போதைய கறம்பக்குடி தாலுகாவை உள்ளடக்கிய ஒருங்கி ணைந்த ஆலங்குடி தாலுகா செயலாள ராகவும் நீண்ட காலம் திறம்பட பணி யாற்றியவர் தோழர் அண்ணாமலை.  கடலோர மீனவர்களை சங்க ரீதியாக அணி திரட்டுவதில் அரும்பாடு பட்டவர். கிராமப்புற  விவசாயத் தொழி லாளர்களை ஒருங்கிணைத்து விவசா யத் தொழிலாளர் சங்கத்தை புதுக் கோட்டை மாவட்டத்தில் பலப்படுத்துவ தில் முக்கிய காரணமாக இருந்தவர்.  சமீப காலமாக தோழர் வி.அண்ணா மலை உடல் நலக்குறைவாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி புதனன்று மதியம் ஆலங்குடி தாலுகா, மாங்காடு பூச்சி கடையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.  அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத் திற்கு கட்சியின் திருவரங்குளம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.மணி வண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச்  செயலாளர் எஸ்.கவிவர்மன், சிபிஐ  மாவட்டச் செயலாளர் த.செங்கோடன், முன்னாள் மாவட்டச் செயலாளர் மு.மாதவன், சிபிஎம் மூத்த தோழர்கள் எம்.ஜியாவுதீன், வி.துரைச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் சு.மதியழகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எல். வடிவேல், பி.சுசிலா, எஸ்.பாண்டிச் செல்வி, குமாரவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  அவருக்கு வசந்தி என்ற மனைவி யும் இரண்டு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.