districts

img

டெல்டா மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

திருச்சிராப்பள்ளி, ஆக.9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவரும் மேற்கு  வங்கத்தின் முன்னாள் முதல்வரு மான தோழர் புத்ததேவ் பட்டாச் சார்யா மறைவுக்கு டெல்டா மாவட் டங்களின் பல்வேறு இடங்களில் மல ரஞ்சலி மற்றும் செவ்வணக்கம் செலுத்தப்பட்டது. திருச்சி வெண்மணி இல்லத்தில்  வெள்ளியன்று நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சி யில் மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மூத்த தோழர் கே.வி.எஸ் இந்துராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின், மாவட்டக் குழு உறுப்பினர்கள், தீக்கதிர் திருச்சி  பதிப்பு பொது மேலாளர் ஜெயபால் உள்ளிட்ட பலர் தோழர் புத்ததேவ்  பட்டாச்சாரியா உருவப் படத்திற்கு  மாலை அணிவித்து செவ்வணக்கம் செலுத்தினர். கட்சியின் புறநகர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு, கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன் தலைமை வகித்தார். மாநில  செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாநிலக் குழு உறுப் பினர்கள் எம்.சின்னதுரை, ஐ.வி.நாகராஜன், எஸ்.பி.ராஜேந்திரன்,  மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், மாவட்டக் குழு உறுப்பி னர்கள், பகுதி செயலாளர்கள்  மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தி னர்.

திருவாரூர்

சிபிஎம் திருவாரூர் மாவட்டக் குழு  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாநிலக்  குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன் ஆகியோர் மலர் தூவி செவ் வணக்கம் செலுத்தினர். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், திருவாரூர் ஒன்றியச் செய லாளர் என்.இடும்பையன், நகரச் செயலாளர் எம்.தர்மலிங்கம், வாலி பர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ், தமுஎகச மாவட்டத் தலைவர் எம்.சௌந்தரராஜன், சிஐ டியு மாவட்டத் தலைவர் எம்.கே.என். அனிபா உள்ளிட்டோர் வீரவணக் கம் செலுத்தினர். திருவாரூர் மாவட்டம் முழுவதும்  கட்சியின் ஒன்றியச் செயலாளர் கள், நகரச் செயலாளர் தலைமை யில் அஞ்சலி நிகழ்ச்சி நடை பெற்றது. நிகழ்வில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு  உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

மன்னார்குடி

மன்னார்குடி நகரக் குழுவின் சார்பில், கட்சி அலுவலகத்தில் நடந்த  அஞ்சலி நிகழ்ச்சியில் நகரச் செய லாளர் ஜி.தாயுமானவன், ஒன்றியச் செயலாளர் கை.ஜெயபால். சிஐடியு  மாவட்ட துணைத் தலைவர் ஜி.ரகு பதி, இணைப்பு சங்க தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.

திருத்துறைப்பூண்டி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றிய-நகர குழு சார்பில் தியாகி சிவராமன் நினைவகத்தில் புக ழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. ஜோதிபாசு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செய லாளர் டி.வி.காரல் மார்க்ஸ், நகரச்  செயலாளர் கே.கோபு, நகர்மன்ற  துணைத் தலைவர் எம்.ஜெயபிர காஷ், ஒன்றிய கவுன்சிலர் கு.வேத ரெத்தினம், தமுஎகச மாவட்டப் பொரு ளாளர் எம்.சண்முகம், சிஐடியு மாவட்ட பொறுப்பாளர் என்.லெனின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் அன்னவாசல் ஒன்றியக்குழு உறுப் பினர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே. சண்முகம், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.சுப்பையா ஆகியோர் புக ழஞ்சலி உரையாற்றினர். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். நாகப்பட்டினம் சிபிஎம் நாகை மாவட்ட குழு அலு வலகத்தில், மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, கீழ்வேளூர் சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம். முருகையன், வி.சுப்பிர மணியன், ப.சுபாஷ்சந்திரபோஸ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி னர்.