districts

img

மருதுபாண்டியர் கல்லூரியில் தடய அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர், செப்.16 -  தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி யில், கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன் வழிகாட்டுதலின்படி, தடய அறிவியல் துறையின் சார்பாக தடய அறி வியல் கண்காட்சி நடைபெற்றது.  கல்லூரி முதல்வர் மா.விஜயா கண் காட்சியை தொடங்கி வைத்தார். துணை முதல்வர் ரா.தங்கராஜ், இயற்பியல் துறைத்  தலைவர் பி.சரவணன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர்.  தடய அறிவியல் வாரத்தையொட்டி, தடய  அறிவியல் துறை சார்பாக மாணவ, மாணவி யர் ‘டிகோடிங் குற்றம்’ என்ற தலைப்பில் தடய அறிவியல் கண்காட்சியினை ஒரு வாரம்  நடத்தி வருகின்றனர். இக்கண்காட்சியில் பல பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஏராளமான புகைப்படங்கள், எலும்புக் கூடு மாதிரிகள் மற்றும் கைரேகை பதிவு  செய்தல் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன.  இக்கண்காட்சி மூலம் மாணவர்கள் அனைவரும் தடய அறிவியல் பற்றிய சந்தேகங்களை கேட்டும், அதன் தொடர்பான கருத்துகளையும் பதிவு செய்தனர். மேலும்  இந்நிகழ்வில் துறைசார்ந்த பேராசிரி யர்களும் கலந்து கொண்டனர்.