districts

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடு கட்டித் தருவதாக மோசடி

புதுக்கோட்டை, ஜூன் 24-

     கஜா புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வீடு கட்டித் தருவதாக மோசடி செய்த தனியார் அறக்கட்டளை நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி புதுக்கோட்டை காவல் கண் காணிப்பாளரிடம் மனு அளிக்கப் பட்டது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 16  அன்று வீசிய கஜா புயல் பல்லாயிரக் கணக்கான மக்களின் வீடுகளை சேதப் படுத்திச் சென்றது. வீடுகளை இழந்த  ஏழை மக்களை குறிவைத்து சென்னை யில் செயல்படும் ‘வாக்கர் டிரஸ்ட்’ என்ற  அறக்கட்டளை நிர்வாகி சபரிராஜன், கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நூதன  முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

      மாவட்டத்தில் கீரமங்கலம், மழை யூர், திருமயம், கறம்பக்குடி உள்ளிட்ட  பல்வேறு கிராமங்களில் உள்ள நூற்றுக் கணக்கான மக்களிடம் மூன்று மாதத்தில்  வீடு கட்டிக் கொடுப்பதாகத் தெரிவித்து, முன்பணமாக ஒவ்வொருவரிடமும் ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் வசூலித்துள்ளார். ஆனால், தற்போது வரை பணம் பெற்ற யாருக்கும் சபரிராஜன் வீடு  கட்டி கொடுக்கவில்லை எனக் கூறப்படு கிறது. பணத்தை திருப்பித் தருமாறு  கேட்டால், ‘முடியாது உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங் கள்’ என மிரட்டும் வகையில் பேசுவதாக வும் பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்ற னர்.  

    இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்கள் 30-க்கும் மேற்பட்டோர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளரை சந்தித்து கோரிக்கை மனு  அளித்தனர். அதில், நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட வாக்கர் டிரஸ்ட் அறக்கட்டளை நிர்வாகி சபரிராஜன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தாங்கள் இழந்த பணத்தை மீட்டு தரு மாறு வலியுறுத்தினர்.

    சபரிராஜன் மாவட்ட முழுவதும் 300  முதல் 500 நபர்கள் வரை ரூ.50 லட்சத்துக் கும் மேல் மோசடியில் ஈடுபட்டுள்ள தாக கூறப்படுகிறது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.