பாபநாசம், ஜூன் 19-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு நோட், புக் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக அரசின் விலையில்லா நோட், புக் 50 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
பாபநாசம் வட்டார கல்வி அலுவலர்கள் மணிகண்டன், ஜெய மீனா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) முருகன், பள்ளித் தலைமையாசிரியர் ரமேஷ், ஆசிரியை அமுதா உள் ளிட்டோர் பங்கேற்றனர்.