districts

img

தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.700 வழங்க வேண்டும் மன்னார்குடியில் தொடர் வேலை நிறுத்தம்

மன்னார்குடி, ஜன.25 - மன்னார்குடி நகராட்சி தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ. 700 வழங்க வேண்டும். கொரோனா பெருந்தொற்று முன்களப் பணியாளர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.15 ஆயி ரத்தை உடனடியாக வழங்க வேண்டும்.  கொரோனா நோயில்  மரணமடைந்த தூய்மைப்  பணியாளர் குடும்பங் களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீ டாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளுக்காக சிஐடியு-வில்  இணைக்கப்பட்ட தனியார் ஒப்பந்த துப்புரவு பணியா ளர்கள் ஜன.24 ஆம் தேதி யிலிருந்து வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.   திருநாவுக்கரசு தலை மையில் இரண்டாவது நாளை எட்டியுள்ள இப்போ ராட்டத்தின் கோரிக்கைகளை ஆதரித்தும் வாழ்த்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.கலை மணி, சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்ட துணைத் தலைவர்  ஜி.ரகுபதி, மாநிலக் குழு  உறுப்பினர் ஏ.பி.டி. லோகநா யகி, சிபிஎம் நகர செயலாளர் ஜி.தாயுமானவன், சிஐடியு  இணைப்பு சங்க தலைவர் கள் டி.ஜெகதீசன், ஜி.முத்து கிருஷ்ணன், ஏ.பி.தனு ஷ்கோடி உள்ளிட்டோர் உரை யாற்றினர். முடிவில் சிபிஎம் மாவட் டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி சிறப்புரையாற்றி போராட்டத்தை முடித்து வை த்தார். 117 தனியார் ஒப்பந்த தூய்மைப் பணியா ளர்கள் தொடர் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.

;