மயிலாடுதுறை, ஜூன் 15-
மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் அருகேயுள்ள பரசலூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் பொது நல மன்றம் சார்பில் இலவச குளிர்சாதன சவப்பெட்டி அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி புத னன்று நிறுவன தலைவரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலரும், தொழிலதிபருமான மாயா வெங்கடேசன் தலைமையில் நடை பெற்றது.
20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களின் குடும்பங்களில் ஏற் படுகிற இறப்புகளின் போது கட்டணமின்றி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நவீன குளிர்சாதனப்பெட்டி பல லட்சம் மதிப் பீட்டில் வழங்கப்பட்டது.
மன்றத்தின் மாநில பொது செயலாளர் த.சரவணக்குமார் வரவேற்றார். பரசலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஹிட்லர், திமுக மூத்த பேச்சாளர் பரசலூர் கந்தசாமி, மூத்த செய்தியாளர் சந்திரசேக ரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து குளிர்சாதன சவப்பெட்டியினை அர்ப்பணித்து மாயாவெங்கடேசன் பேசினார். கீழையூர் ஜோதிபாசு நன்றி கூறி னார்.