கும்பகோணம், ஜூன் 16-
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் ஆரியச்சேரி, ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் பள்ளியைச் சுற்றியுள்ள கீரனூர் சேத்திகுளம், செம்மங்குடி, பருத்திச் சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து மாண வர்கள் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.
ஆரியசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அரசு பள்ளி என்றாலும் ஆசிரியர்க ளின் முன் முயற்ச்சியால் எல்கேஜி மற்றும் யுகேஜி தனது சொந்த நிதியிலிருந்து மாண வர்களின் நலன் கருதி நடத்தி வருகிறார்கள். மேலும் கிராமங்களில் இருந்து பள்ளி குழந் தைகள் வந்து செல்வதற்கு தன்னார்வர்கள் உதவியுடன் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி யும் சிறப்பாக நடத்தி வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்நிலையில், இந்த கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் திரு விடைமருதூர் ஒன்றியத்திலேயே அதிக மாணவர்களை சேர்க்கை நடைபெற்று சிறப்பாக மேற்கொண்டு பள்ளியை மிகச்சிறப் பாக நடத்திவரும் தலைமையாசிரியர் ந.மே கலா மற்றும் ஆசிரியர்களுக்குப் திருவிடை மருதூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் க.நிவேதா, இரா.இராஜேந்திரன் ஆகியோர் பாராட்டி கௌரவித்தனர்.
அப்போது மாணவர்களுக்கு அரசின் விலையில்லாப் பாடப் புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்பேடுகளை வழங்கினர்.