districts

உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானியத்தில் பண்ணை இயந்திரங்களை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

திருச்சிராப்பள்ளி, ஏப்.9 - திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைகிற இடத்தினை யும், திட்டங்களின் வரைபடத்தினையும், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை நேரில்  பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர் களுக்கு ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சிய ரகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில்  மண்ணச்சநல்லூர் வட்டாரத்தைச் சார்ந்த பிச்சாண்டார் கோவில், கொணலை, கிளிய நல்லூர் ஆகிய ஊர்களின் 3 உழவர் உற்பத்தி யாளர் குழுக்களுக்கு ரூ.15 லட்சம் மானி யத்தில் ஒரு நெல் நடவு இயந்திரம், 2 பவர்  டில்லர், 15 பவர் வீடர் என 18 பண்ணை இயந்திரங்கள், தோட்டக்கலைத் துறையின் சார்பில் தரிசு நில தோட்டக்கலை சாகுபடி யில் சிறப்பாக தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்த 3 விவசாயிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை யும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார். பின்னர், திருச்சி வயலூர் சாலையில் உள்ள குடமுருட்டி ஆற்றின் கரையினை பலப்படுத்தி சாலை அமைப்பது தொடர்பா கவும். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய அலுவலகக் கட்டிடம் கட்டுவது தொடர் பாகவும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, மாவட்ட ஆட்சியர் சிவராசு,  மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர் கள், பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.