districts

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வட்டாரக் குழு கூட்டம்

அறந்தாங்கி, ஜூலை 23 -

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மாவட்ட  கல்வி அலுவலர் (தொடக்கநிலை) சண்முகம் தலைமை யில் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கான குழு கூட்டம் தொடங்கியது.

    மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஒவ்வொரு மாதத்தின் முதல் திங்கள்கிழமை காலை இறைவணக்கக் கூட்டத்தில் வேற்றுமையை ஒழிப்போம் என்ற உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ் வொரு மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அன்று மதியம் 3 மணியளவில் மாற்றுத்திறன் கொண்ட மாண வர்களுக்கான திட்டங்கள் குறித்து வட்டார அளவிலான குழு கூட்டம் நடத்த வேண்டும். தேசிய அடையாள அட்டை யினை அனைத்து மாணவர்களும் பதிவு செய்ய வேண்டும்.

    எண்ணும் எழுத்தும் ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு வழங்கப்படுகிற புத்தகங்கள் பயன்படுத்தப் பட வேண்டும். பெண் குழந்தைகளுக்கான ஊக்கத் தொகை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  ஒவ்வொரு மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களுக்கும், உடல்நலம் மற்றும் மனநலம் சார்ந்த கேள்விகளுக்கு சிறப்பாசிரியர்கள் வாயிலாக பதிவு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வி  ஒருங்கிணைப்பாளர்கள், சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.