அறந்தாங்கி, மே 29-
இந்திய வனவிலங்கு நிறுவனம் மற்றும் புதுக் கோட்டை மாவட்ட வனத்துறை இணைந்து கோடியக்கரை யில் சுமார் 30 மீனவர்களின் குழந்தைகளிடம் கடல்வாழ் உயிரினங்கள், கடல்பசுக்கள், கடற்பாசிகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பது பற்றி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குழந்தைகள் மிகவும் உற்சாகமாக இதில் கலந்து கொண்டனர். கடல்பசு பற்றி கேள்விகள் பதில் நிகழ்ச்சி யும் நடைபெற்றது.
பின்னர் அனைவரும் சேர்ந்து கடல்களின் தேவதை கடல்பசு, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் நமது பெருங்கட லைப் பாதுகாப்போம் என்று கோஷங்கள் எழுப்பப் பட்டன. நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் இந்திய வனவிலங்கு நிறு வனத்தைச் சேர்ந்த ஸ்வேதாஐயர், அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மேகலா, இந்திய வனஉயிர் நிறுவனத்தை சேர்ந்த அஜித்குமார், பிரவீன், மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம், மணமேல்குடி வன அலுவலர் அன்பு மணி, சோனைமுத்து, வேட்டை தடுப்பு காவலர் முத்து ராமன், இந்திய வனவிலங்கு நிறுவனம், புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை, கடலோர காவல் துறை, மீன் வளத்துறை,மற்றும் உள்ளூர் மீனவர்கள் கலந்து கொண்டனர்.