districts

img

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்ற தாய்க்கு மேயர் அன்னையர் தின வாழ்த்து

தஞ்சாவூர், மே.14 -

    ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்றெடுத்த தாயின் வீட்டுக்கு நேரில் சென்ற தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், அன்னையர் தினத்தில்  தாயையும், குழந்தைகளையும் வாழ்த்தி ஊட்டச்சத்துப் பொருட் களை வழங்கினார்.

   தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட சீனிவாசபுரம் வடகரைப் பகுதியில் வசிக்கும் கார்த்திகேயன் - திலகா தம்பதியினருக்கு திருமணம் நடந்து ஆறு ஆண்டுகள் கழித்து கடந்த மார்ச்  மாதம் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண்  குழந்தைகள் பிறந்தன.

   அன்னையர் தினத்தை முன் னிட்டு ஞாயிறன்று தஞ்சாவூர் மாநக ராட்சி மேயர் சண்.ராமநாதன் மூன்று  குழந்தைகளின் தாயான திலகாவுக்கு ஊட்டச்சத்துப் பொருட்களை அவரது வீட் டிற்கே சென்று கொடுத்து அன்னையர் தின  வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.