districts

அரசு பள்ளி நிலத்தை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் அதிகாரிகள்!

கரூர், செப்.17 - கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசுப் பள்ளிக்குச் சொந்தமான நிலங்களை தனியாருக்கு தாரைவார்க்க அரசு அதிகாரிகள் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலத்தை பாதுகாக்க 13 ஆண்டுகளாக குளித்தலை பகுதி  மக்கள் போராடி வருகின்றனர். வைகைநல்லூர் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிரா விடர் நல பள்ளிக்கு சொந்தமான 232 செண்ட் நிலத்தை முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆக்கிரமித்ததாக குற்றச் சாட்டு உள்ளது. இதில் 65 சென்ட் காலி நத்தம் புறம்போக்கு  நிலமும், 167 சென்ட் திருச்சி ஜில்லா போர்டு நிலமும் அடங்கும்.  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.கோபால், அவரது  தம்பி, முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நளினி  கலைமணியின் மைத்துனர், தற்போதைய பாஜக கரூர் மாவட்ட துணைத் தலைவர் மொட்டையாண்டி மகன் செல்வம்  ஆகியோர் வருவாய்த்துறை, குளித்தலை வட்டார வளர்ச்சி  துறை அதிகாரிகள் உதவியோடு நிலத்தை ஆக்கிரமித்த தாக குற்றச்சாட்டு உள்ளது. 2012ல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மாரிமுத்து இந்நிலத்தை பள்ளிக்கு ஒதுக்க கோரினார். 2014ல் நில ஆக்கி ரமிப்பாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, போலி பத்திரப் பதிவு ரத்து செய்யப்பட்டது. 2021ல் பள்ளி மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் இன்று வரை நிலம் பள்ளிக்கு ஒப்படைக்கப்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள்  கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்நிலத்தை மீட்க  தொடர்ந்து போராடி வருகின்றன. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் செயற்குழு உறுப்பினர் கே. சாமுவேல்ராஜ், சட்ட மன்ற குழு தலைவராக இருந்த பாலபாரதி ஆகியோர் தலை மையில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச்செல்வன், விசிக மாநில செயற்குழு உறுப்பினர் இ.பி.காமராஜ்,  குளித்தலை வட்டார காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆறுமுகம்  ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மறியல் போராட்டம்  நடத்தினர். ஆனால் அதிகாரிகள் உறுதியளித்தும் இதுவரை  நடவடிக்கை எடுக்கப்படவில்லை.  தற்போது நில ஆக்கிரமிப்பாளர்கள் அரசு வைத்திருந்த  தகவல் பலகையை அகற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதி காலை 10  மணிக்கு குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது என குளித்தலை ஒன்றியச்  செயலாளர் இரா.முத்துச்செல்வன் தெரிவித்துள்ளார்.  நிலத்தை மீட்டு, அதில் தகவல் பலகை வைத்து, முட்பு தர்களை அகற்றி கம்பி வேலி அமைத்து, பள்ளி விரிவாக்கத் திற்கு ஒப்படைக்க வேண்டும் என்பதே இப்போராட்டத்தின் கோரிக்கைகளாகும். இந்நிலம் மீட்கப்பட்டால் பள்ளியின் 578 மாணவர்களுக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.