தஞ்சாவூர், ஜன.3 - தஞ்சாவூரில், தேசிய உணவு தொழில் நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில், வெள்ளியன்று வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தும் வளர்ச்சி குறித்த மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில், நிறுவனத்தின் இயக்கு நர் பழனிமுத்து தலைமை உரையாற்றினார். இதில், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசுகையில், இந்தி யாவின் வளர்ச்சிக்கு தமிழகம் இயந்திர சக்தியாக உள்ளது. வாழை, மாங்காய், நெல் எல்லாம் விவசாயிகள் உற்பத்தி செய்தாலும், அதனை மதிப்பு கூட்டுவதற்கான கட்டமைப்பு இல்லை. உலகளாவிய வர்த்தகத்தில், விவ சாயிகளின் விளைபொருட்கள் உலக நாடுகள் முழுவதும் செல்ல வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் உள்ளது. இந்த மதிப்பு கூட்டும் முறையை ஒரு சில நிறுவனங்கள் கையில் வைத்துக்கொண்டு, விவசாயிகளுக்கு பார மாக இருந்து வருகிறார்கள். இதனை உடைக்க வேண்டும் என முதல்வர் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். விவசாயிகளின் வளர்ச்சியை உறுதி செய்யும் பணியில் நாங்கள் இறங்கியுள்ளோம். டெல்டாவில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி தொழிற் பேட்டைகள் கொண்டு வரப்பட உள்ளது” என்று தெரிவிததார். முன்னதாக வேளாண்மை துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகை யில், தமிழக அரசின், ஐந்து கோடி ரூபாய், மானியத்துடன் அரிசி உமியிலிருந்து சிலிக்கான் உற்பத்தி செய்கிற திட்டம் தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசா யிகள் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும். இதுபோன்ற மாநாடுகள் மூலம் விவசாயி கள் உற்பத்தியாளர் களாகவும், முதலாளிகளா கவும் மாறுவதற்கான வாய்ப்புகள் உரு வாகும். இந்த மாநாட்டில் விவசாயிகள் பயிற்சி பெற்று விவசாயப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார். விழாவில், தமிழ்நாடு உணவு பதப் படுத்துதல்-வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் நிர்வாக அலுவலர் அழகுசுந்தரம் கருத்துரையாற்றினார். திருவனந்தபுரத்தில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர் டிசிப்ளினரி சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் இயக்குநர் அனந்தராமகிருஷ்ணன் சிறப்புரை யாற்றினார்.