மழைநீரில் மூழ்கிய தரைப்பாலம்: போக்குவரத்து பாதிப்பு
பெரம்பலூர், டிச.14 - பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், காருகுடியில் இருந்து முருக்கன் குடி வரை செல்லும் சாலையின் இடையே தரைப்பாலம் உள்ளது. கனமழையினால் இந்தப் பாலம் முற்றிலும் மூழ்கியதால் அவ்வழியே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பெரம்ப லூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை யினால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் காருகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையினால் காடுகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் தரைப்பாலத்தின் மீது செல்வதால் அவ்வழியே போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தை சுற்றியுள்ள நூற்றுக் கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்டு உள்ள கரும்பு, நெல் உள்ளிட்டவை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இதனால் காருகுடி முதல் முருக்கன்குடி வரை செல்லும் தரை பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டுமென பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் 25 கால்நடைகள் உயிரிழப்பு; 66 வீடுகள் சேதம்
மயிலாடுதுறை, டிச.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் ஆறுபாதி ஊராட்சி ஈஸ்வரன்கோவில் தெருவில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதி மக்களிடம் குறைக ளை கேட்டறிந்து, விரைவில் மழைநீர் வெளியேற்றப்படும் என உறுதியளித்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரு கிறது. இதனையொட்டி, குடி யிருப்பு பகுதிகளைச் சுற்றி தேங்கியுள்ள மழைநீரை வெளி யேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நகராட்சி, பேரூ ராட்சி, ஊரகப் பகுதிகளில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்ட அலுவ லர்கள் தொடர்ந்து கண்காணித்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத்தும் பணி களை மேற்கொண்டு வருகின்றனர். 25 கால்நடைகள் பலி; 66 வீடுகள் சேதம் வட்ட அளவிலான முன்னெச்ச ரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு ஆகிய குழுக்கள் ஒவ்வொரு வட்டத்திற்கும் 10 அனைத்துத் துறை அலுவலர்களைக் கொண்டு தனித்தனி குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதன்படி 4 வட்டத் திற்கும் துணை ஆட்சியர்கள் தலைமையில், ஒரு வட்டத்திற்கு 3 குழுக்கள் வீதம் மொத்தம் 12 தனித் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு தற்போது, மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீரை அப்புறப்படுத் தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த டிச.11, 12 ஆகிய 2 தினங்கள் பெய்த மழையினால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 6 மாடு கள், 4 கன்றுகள், 15 ஆடுகள் உயி ரிழந்துள்ளன. 57 கூரை வீடுகள், 9 ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து, மழை பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு உரிய நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார். வீடு இடிந்து விழுந்து 4 ஆடுகள் உயிரிழப்பு தரங்கம்பாடி வட்டத்தில் பொறையார், அனந்தமங்கலம், திருக்கடையூர், ஆக்கூர், செம்ப னார்கோவில், கீழையூர், திரு விளையாட்டம், ஆயப்பாடி மற்றும் சந்திரபாடி, பெருமாள்பேட்டை, சின்னங்குடி உள்ளிட்ட கடலோர மீனவ கிராமங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதி களில் மழை நீர் சூழ்ந்து, மக்க ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காழியப்பன்நல்லூர் ஊராட்சி அனந்தமங்கலம் ஓடக்கரை தெரு வைச் சார்ந்த ரத்தினகுமார் என்பவ ருக்கு சொந்தமான சுமார் 35 ஆண்டு கள் பழமையான மாடி வீடு வியாழக் கிழமை இரவு திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் உரிமையாளர் ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவி, மூன்று குழந்தைகள் வீட்டின் பின்புறம் உறங்கிக் கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினர். மேலும் வீட்டில் கட்டப்பட்டிருந்த 4 ஆடுகள் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாப மாக உயிரிழந்தன. தகவல் அறிந்த பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர் நிவேதா எம். முருகன் பாதிக்கப் பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து தனது சொந்த நிதியில் ரூ.10 ஆயிரம், அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கினார். மேலும் அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என தெரி வித்தார்.
கனமழை பாதிப்பு: நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்க! சிபிஎம் வலியுறுத்தல்
புதுக்கோட்டை, டிச.14 - தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல், சோளம், உளுந்து உள்ளிட்ட சாகுபடிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தண்ணீருக்குள் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற முடியாமலும், அறுவடைக்குத் தயாராக உள்ள தானியங்களை உலர வைக்க முடியாமலும் விவசாயிகள் கடுமையான சிரமத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்களும் வேலையின்றித் தவித்து வருகின்றனர். கால்நடைகளும் மேய்ச்சலுக்கு வழியின்றி பட்டினி கிடக்கின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான காலனி வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் சமைப்பதற்கும், உறங்குவதற்கும்கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாதிப்புக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை கால தாமதமின்றி வழங்க வேண்டும். வேலையின்றி தவித்து வரும் விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பழுதடைந்த காலனி வீடுகளை உடனடியாக செப்பனிடுவதற்கும், வசிக்கவே முடியாத அளவில் உள்ள வீடுகளில் குடியிருப்பவர்களை உடனடியாக மாற்று இடத்தில் தங்க வைப்பதோடு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துதரவும் வேண்டுமென” கூறப்பட்டுள்ளது.
தொடர் மழையால், தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையை அடுத்த கணபதி அக்ரஹாரம் கும்பகோணம் - திருவையாறு மெயின் சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான மா மரம் வேரோடு சாய்ந்தது.
அய்யம்பேட்டை அருகே கோவிந்தநாட்டுச் சேரி ஊராட்சி, பட்டுக்குடியில் வாழைக் கொல்லையில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமிற்குள் மழைநீர்: 72 குடும்பங்கள் தவிப்பு
பெரம்பலூர், டிச.14 - பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிர்ப்புறம் கடந்த 35 ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த னர். இந்நிலையில் அவர்களுக் கென்று புதிதாக பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுள்பாளையம் பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம், ரூ.4.77 கோடியில் அடிப்படை வசதி களுடன் 72 குடியிருப்புகள் கட்டப் பட்டன. இவை கடந்த 12.3.2024 அன்று திறக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதமாக பழைய இடத்திலிருந்து அவர்களை அவசர அவசரமாக அங்கிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் காலிச் செய்து, புதிதாக கட்டப்பட்டுள்ள கவுள்பாளையம் பகுதியில் உள்ள புதிய குடியிருப்பு முகாமிற்கு செல்லுமாறு அறிவித்தனர். இந்நிலையில் 72 குடும்பங்களும் அங்கே குடிபெயர்ந்தன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்கிறது. இலங்கை தமிழர் முகாமில் எந்த வொரு அடிப்படை வசதியும் முழு மையடையவில்லை. இதனால், குடியிருப்பு முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளது. மேலும் செப்டிக் டேங்க் முழுவதும் நிரம்பியுள்ளது. மின்சாரப் பெட்டியில் மழைநீர் வடிவதால் வீட்டுச் சுவற்றில் கை வைத்தால் ஷாக் அடிக்கிறது என குடியிருப்பு வாசிகள் கூறுகின்ற னர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு, காம்பவுண்ட் சுவர் கட்ட வேண்டும் என்றும், அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.