districts

img

குடகனாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சின்னாளபட்டி, டிச.13-  திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கீழ்மலை, கோம்பை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி யில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள காமராஜர் அணை வேகமாக நிரம்பியுள்ளது.  அதிக அளவிலான தண்ணீர் மறுகால் பாய்ந்து வரு வதனால், குடகனாற்றில் அதிக அளவில் தண்ணீர் செல்கி றது. இதனால் குடகனாற்றின் கரையோர மக்களுக்கு வட்டாட்சியர் முத்துமுருகன் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.