மீன் விற்பனையாளர்கள் சங்க பேரவை
திருவாரூர், பிப்.10 - மீன் மற்றும் இதர பொருள்கள் விற்பனையா ளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை, திருவாரூரில் உள்ள சிஐடியு மாவட்ட அலுவலகத்தில் நடை பெற்றது. பேரவைக்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் சி.செல்லத்துரை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் எஸ்.அந்தோணி சிறப்பு ரையாற்றினார். முன்னதாக சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என். அனிபா, பொருளா ளர் ஆர்.மாலதி, துணைச் செயலாளர் கே.பி.ஜோதி பாசு ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர். நிகழ்ச்சி யில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண் டனர். இதில் அமைப்பின் புதிய மாவட்டத் தலைவராக எம்.பி.கே.பாண்டியன், செயலாளராக ஜி.தனுஷ் கோடி, பொருளாளராக த. லெனின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
அரசுப் பள்ளியில் முப்பெரும் விழா
அரியலூர், பிப்.10- அரியலூர் அரசு மேல் நிலைப் பள்ளியில், 100 ஆவது ஆண்டு விழா, இலக்கிய மன்றம் மற்றும் விளையாட்டு விழாக்கள் நடைபெற்றன. விழா விற்கு, மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமை வகித்தார். அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் சு.ஜெயா முன்னிலை வகித்தார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பல்வேறு போட்டி களில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ் களையும் வழங்கினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் அ.செல்வராசு வரவேற்றார். கணித ஆசிரி யர் ச.சரவணன் நன்றி தெரிவித்தார்.
பிளாஸ்டிக் பறிமுதல்
பாபநாசம், பிப்.10 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி சார்பில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடுகளை கண்ட றிய பாபநாசம் - சாலிய மங்கலம் சாலை, கடை வீதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 20 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது டன், ரூ.7,800 அபராதமும் விதிக்கப்பட்டது. இச்சோ தனையில் செயல் அலு வலர் ரவி ஷங்கர், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
ரேசன் அரிசி பதுக்கியவர் கைது
புதுக்கோட்டை, பிப்.10- புதுக்கோட்டை நகரில் 1500 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்த பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை நகரில் சிதம்பரநகர் பகுதியில் பொதுவிநியோகத் திட்ட அரிசியை பொதுமக்களி டம் குறைந்த விலைக்கு வாங்கி பதுக்கி வைத்து கடத்துவதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீ சாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்ட போலீசார், 1500 கிலோ ரேசன் அரிசியைப் பறி முதல் செய்து திலகவதி (45) என்பவரை கைது செய்த னர்.
இளைஞர் கொலை வழக்கில் 3 பேர் கைது
புதுக்கோட்டை, பிப்.10 - இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். புதுக்கோட்டை அடப்பன் வயல் 6 ஆம் வீதியைச் சேர்ந்த ஒச்சி கார்த்தி (25) வியாழக்கிழமை அரிவா ளால் வெட்டிக் கொலை செய் யப்பட்டார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீ சார் வழக்கப் பதிந்து குற்ற வாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், நரிமேடு பகுதியில் பதுங்கி இருந்த புதுக்கோட்டை 6 ஆம் வீதி யைச் சேர்ந்த சீனிவாசன் (29), அடப்பன்வயல் 3 ஆம் வீதியைச் சேர்ந்த நெருப்பு தினேஷ் (25), பலூன் சொர்ணமூர்த்தி (24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மூவரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.
தொழில்நெறி வழிகாட்டுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரியலூர், பிப்.10- அரியலூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டல் மையம் சார்பில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிந்தபுதூரிலுள்ள தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் (பிஏசிஆர்) நடைபெற்ற நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பன்னீர்செல்வம், நாகப் பட்டினம் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியோர், தொழில் கல்வியின் அவசியம் குறித்தும், சுய தொழில் முக்கியத் துவம் குறித்தும் பேசினர். அரியலூர் மாவட்ட இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மூ.வினோத்குமார், மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணி வாய்ப்புகள் குறித்து எடுத்து ரைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவல கத்தின் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ச.மணிமாறன், உதவியாளர்கள் கணபதி, அ.அருணா, மு.வரதராஜன் ஆகி யோர் போட்டித் தேர்வுகள் குறித்து எடுத்துரைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்பயிற்சி நிலைய மாணவர்கள் பயனடைந்தனர். முன்னதாக தொழில்பயிற்சி நிலைய முதல்வர் ராமநாதன் வரவேற்றார். இல்லத்தரசிகளுக்கு சிறப்பு நிகழ்ச்சி மேற்கண்ட பயிற்சி நிலையத்தில் இல்லத்தரசிகளுக்கான சிறப்புத் தொழில் வழிகாட்டுதல் மற்றும் திறன் பயிற்சி குறித்து விழிப்புணர்வு நடைபெற்றது. இதில், திறன் பயிற்சியின் அவசி யம், சுயதொழில் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா
தஞ்சாவூர்/அரியலூர், பிப்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் சு.கவிதா தலைமை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் தி.மாரிமுத்து, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கோ.சுகன்யா, பள்ளி மேலாண்மைக் குழு துணை தலைவர் த.சசிகலா, ஊராட்சி மன்ற உறுப்பினர் ரா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பழனிவேல் வரவேற்றார். ஆசிரியர் ராஜஸ்ரீ ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரணிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளி (ஆ.தி.ந) தலைமை ஆசிரியர் மு.சற்குணம், சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் தனபாக்கியம், ஆசிரியர் பயிற்றுநர் அ.ரா.சரவணன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இலக்கிய மன்றம், வானவில் மன்றம், விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரியலூர் அரியலூர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமை வகித்து பேசினார். சட்டப் பேரவை உறுப்பினர் கு.சின்னப்பா , பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். புரவலர் சீனி.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியை ச.உமா வரவேற்றார். சமூக அறிவியல் ஆசிரியர்ஆ.மணிமாறன் நன்றி தெரிவித்தார்
திருவாரூர் மத்திய பல்கலை.யின் திறன் மேம்பாட்டுத் திட்ட துவக்க விழா
திருவாரூர், பிப்.10 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் (CUTN) பொருளாதாரத் துறை யானது, பள்ளி மாணவர்களிடையே அத்தியாவசியத் திறன்களை வளர்க்கும் வகையில் 15 நாள் அடிப்படைத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் துவக்க விழாவை நடத்தின. நீலக்குடி ஊராட்சிப் பள்ளியில் நடந்த இவ்விழாவில் மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரி யர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்துப் பேசினார். பதி வாளர் பேராசிரியர் ஆர்.திருமுருகன் சிறப்புரையாற்றி னார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தின் சார்பில் நீலக்குடி பள்ளியில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நூல் நிலையத்தின் ஆண்டு விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நூலகத்துக்கு அதிக எண்ணிக் கையில் நூல்களை வழங்கிய பல்கலைக்கழக ஆசிரி யர்கள், மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகப் பொருளாதார துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் என்.ராஜகோபால், கே.தாமோதரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
அங்ககப் பண்ணையம், இடுபொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம்
தஞ்சாவூர், பிப்.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) எஸ்.ராணி அறிவுறுத்தலின்படி, அட்மா திட்டத்தின்கீழ் அங்கக பண்ணையம் மற்றும் அங்கக இடுபொருட்கள் உற்பத்தி பற்றிய பயிற்சி கால கம் கிராமத்தில் நடைபெற்றது. வட்டார தொழில்நுட்ப மேலாளர் பொன்.செல்வி வரவேற்றார். பேராவூரணி வட்டார இயற்கை விவசாயி இரா.கமலக் கண்ணன், அங்ககப் பண்ணையம் மற்றும் இடுபொருள் கள் உற்பத்தி பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். தொடர்ந்து மீன் அமிலம், ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை பற்றிய செயல் விளக்கம் அளித்தார். இவை பயிர்களுக்கு வளர்ச்சியூக்கியாக பயன்படுகிறது. மீன் அமிலத்தை தென்னை மரம் வேரில் கட்டுவதால் தென்னங்குரும்பை உதிர்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது. மேலும், மரநாய்கள் மூலம் சேதம் விளைவிக்காமல் தடுக்கப்படுகிறது. அக்னி அஸ்திரம், தண்டு துளைப் பான், இழைச்சுருட்டுப் புழு, அஸ்வினி போன்ற பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. தென்னையில் ஊடுபயிராக மிளகு, ஜாதிக்காய், பப்பாளி, வாழை போன்ற பயிர்களை பயிரிடுவதால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பேராவூரணி வேளாண்மை அட்மா திட்ட அலுவலர்கள் பொன். செல்வி, கு.நெடுஞ்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.