மயிலாடுதுறை, பிப்.12 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டத்திற்குட்பட்ட சந்திரப்பாடி கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.32 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி இறங்குதளம் அமைப்பதற்கான கட்டுமானப் பணி களுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) முகம்மது ஷபீர் ஆலம் ஆகியோர் முன்னிலை யில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசுகையில், “ரூ.32 கோடியில் மீன்பிடி இறங்கு தளம் அமைக்கப்படும் போது, 1 லட்சம் கன மீட்டர் அளவுக்கு கடலில் உள்ள மணற்பரப்பு ஆழப்படுத்தப்பட வுள்ளது. மேலும், இங்குள்ள ஆற்றின் இருபுறமும் சுமார் 320 மீட்டர் நீளத் திற்கு தடுப்புச் சுவரும், 60 மீட்டர் நீளத்திற்கு படகு அணையும் துறையும் அமையவுள்ளது. இந்த மீன்பிடி இறங்குதளம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்போது, சந்திர பாடி பகுதியிலுள்ள மக்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், மயிலாடுதுறை மாவட்டத் தில் உள்ள கடலோரப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக் காக, சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் முதலைமைச்சரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து கோரிக் கைகளையும் பரிசீலனை செய்து முத லமைச்சர் ஒவ்வொன்றாக நிறை வேற்றுவார்” என்றார். தொடர்ந்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டத் தின்கீழ் 40 சதவீதம் மானியத்துடன் 9 பயனாளிகளுக்கு தலா ரூ.75,681 வீதம் ரூ.6,81,129 மதிப்பிலான குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாக னங்களையும் அமைச்சர் வழங்கினார்.