தஞ்சாவூர், ஜன.9 - தஞ்சாவூர், மருதுபாண்டியர் கல்வியி யல் கல்லூரியில் “நெருப்பில்லா சமையல் உணவுத் திருவிழா” (Fire less cooking) நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்தார். மருது பாண்டியர் கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்பிரமணியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் மா.விஜயா, துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் சிறப்பித்தனர். மருதுபாண்டியர் கல்லூரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத் துறைத்தலை வர் கே.ராஜபிரியா நடுவராக பங்கேற்று, இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்வு செய்தார். வெற்றி பெற்ற குழுவினரை ஊக்கப் படுத்தும் விதமாக பரிசுத்தொகை வழங்கப் பட்டது. விழாவில், மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.